இன்ஸ்டா, சமூக வலைதள பகிர்வுகள் குறிப்பாக புகைப்படங்கள் மூலம் எப்படியும் வைரலாகிவிட வேண்டுமென்று சோஷியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் நடிகை உர்ஃபி ஜாவேத். ட்ரோல் ஆனாலும் பரவாயில்லை ஊடக வெளிச்சத்திற்கு வந்தால் போதும் என்று வரும் கேட்டகரி இவர். சர்ச்சையைக் கிளப்ப வேண்டுமென்றே ஆடையை அணிந்து வரும் உர்ஃபி இன்று மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சர்ச்சை மட்டுமின்றி செம கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார் உர்ஃபி. ஆடை இருக்கிறதா என்பது போல பூக்களை உடலில் ஒட்டி ஒரு ஆடையை அணிந்துள்ளார் உர்ஃபி. 


தொலைக்காட்சி பிரபலமான உர்ஃபி ஜாவேத் 2016ல் படே பய்யா கி துல்ஹனியா என்ற தொடரில் அவ்னி பந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களைப் பெற்றார். அதன் பின்னர் சந்திரா நந்ஹினி, சாத் ஃபேரோ கி ஹீரா ஃபேரி, பெப்பன்னா, ஜிஜி மா, ஆயி மேரே ஹம்சஃபர் என பல தொடர்களில் நடித்து தனது ஃபேன்ஸ் கிளப்பை விஸ்தரித்து வைத்துள்ளார்.






பிக்பாஸில் கலந்து கொண்டார். அதன் மூலம் அவர் மீது இன்னும் இன்னும் அதிகமாக ஊடக வெளிச்சம் பாய்ந்தது. இந்நிலையில், அந்த வெளிச்சம் எல்லாம் பத்தாது என்பதுபோல் அவ்வப்போது தனது இன்ஸ்டா, சமூக வலைதள பகிர்வுகள் குறிப்பாக புகைப்படங்கள் மூலம் லைம் லைட்டுக்கு வருவார். ராக்கி சாவந்த், பூனம் பாண்டே, ஸ்ரீரெட்டி வகையறாவில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் இவரை. 


தன்னை ட்ரோல் செய்பவர்கள் குறித்து உர்ஃபி ஒருமுறை, "நான் இதை நினைத்தெல்லாம் கவலைப்படுவதே கிடையாது. அந்த முட்டாள் மக்கள் என்னை எப்போது தொந்தரவு செய்ததும் கிடையாது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது எனக்கு இடைஞ்சலா இருந்தது இல்லை. மீடியா தான் என்னை அவமானப்படுத்துகிறது "என்று தவற்றை ஊடகத்தின் பக்கம் திசை திருப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.