நடிகர் வடிவேலு பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் வடிவேலு. ‘வைகைப்புயல்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அவரின் காமெடி காட்சிகள் இல்லாமல் யாருக்கும் ஒருநாள் வாழ்க்கை கழியாது. புகழின் உச்சத்தில் இருந்த வடிவேலு ஹீரோவாக நடிக்க தொடங்கிய பின் சரிவை சந்திக்க ஆரம்பித்தார். நடுவில் அரசியலில் களம் கண்டது வடிவேலு சினிமா வாழ்க்கையை அடியோடு முடக்கியது. 


10 ஆண்டுகளாக வாய்ப்பு இல்லாமல் இருந்த அவர் மெர்சல், கத்திச்சண்டை ஆகிய படங்கள் மூலம் திரும்ப வந்தார். மிகப்பெரிய இடைவெளிக்குப் பின் கடந்தாண்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன் படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்து பலரின் பாராட்டை பெற்றார். இப்படியான நிலையில் வடிவேலு மீது பயில்வான் ரங்கநாதன் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 


ஒரு நேர்காணலில் பேசிய அவரிடம், சினிமாவில் வாய்ப்பு ஏன் குறைந்து போனது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இளைஞர்கள் வர வர முதியவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போவது போல தான் சினிமாவில் வாய்ப்பு குறைந்து போனது. அவரு பத்திரிக்கைகாரர், நிறைய பேசுவாரு. அவர் இருந்தா நாம பேச முடியாது என சொன்னவர் வடிவேலு. ஒரு 2 படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிய பின்பும் கூட இயக்குநர் போன் பண்ணி உங்களுக்கும், வடிவேலுக்கும் என்ன பிரச்சினை என கேட்டார். நான் அடுத்த சில நாட்களில் நடந்த பிரஸ்மீட்டில் வடிவேலுவிடம் நேரடியாகவே படத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டது பற்றி கேட்டேன். அவரோ, ‘நீங்க அனுபவம் உள்ள ஆள். நான் நிக்கணும்னே. நீங்க இருந்தா எப்படி?’ என கேட்டவரிடம் நான் சொல்ல முடியும்?” என சொன்னார். 


தொடர்ந்து பேசிய அவர், “வடிவேலுடன் நான் நடித்த படங்களில் வாய்ப்பு எல்லாம் அவர் வாங்கி கொடுத்தது இல்லை. வடிவேலு நேரடியாக நம்மிடம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பார். ஆனால் இயக்குநரிடம் போய் கேட்பார். அதனால் தான் எல்லா துணை நடிகர்களும் வடிவேலு மீது குற்றச்சாட்டு வைப்பார்கள். அவரின் திறமையை நான் என்றும் மதிக்கிறேன். 


அப்படிப்பட்ட வடிவேலுவும் பல அறைகளில் உல்லாசமாக இருந்தார். அதற்கு நானே சாட்சி. பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஷூட்டிங்கின் போது நள்ளிரவில் ஒரு அறையில் பெண் ஒருவர் ஓ..வென கதறினார். நானும் புரொடக்‌ஷன் மேனேஜரும் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தோம். அவர் ஏதோ அப்பெண்ணை பண்ணிவிட்டார்.  அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பார் என என நினைக்கிறேன்” என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.