விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பாக்கியலெட்சுமி சீரியலில் கோபியா வலம் வரும் நடிகர் சுதிஷ் 90 களில்  சின்னத்திரையில் பல சீரியல்களில் மாஸ் ஹீரோவாக வலம் வந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.


விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக பாக்யலெட்சுமி சீரியல் கதைக்களம் நகர்ந்துவருகிறது. அப்பாவியான குணத்தைக்கொண்ட பாக்யாவாக நடிகை சுதித்ராவும், ஏமாற்றும் கணவர் ரோலில் நடிகர் சுதிசும் நடித்து வருகின்றனர். கணவர் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கும் மனைவி பாக்யலெட்சுமி, இதனால் மிகுந்த அவமானங்களைச் சந்திக்கிறது. இந்நிலையில் தான் வாழ்க்கையில் எப்படியாவது தனது சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு கேட்ரிங் தொழில் மேற்கொண்டு வருகிறார்.



இப்படி கதைக்களம் நகர்ந்துக்கொண்ட நிலையில் தான் பாக்யலெட்சுமியின் கணவர் கோபி தனது கல்லூரி காதலியான ராதிகாவை 2 வது திருமணம் செய்துக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக நீதிமன்றம் வரை சென்ற நிலையில் பாக்யலெட்சுமி எதுவும் தெரியாமல் இருந்தது ரசிகர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியது. ஆனால் கடந்த  சில தினங்களாக கோபியின் மீது சந்தேகம் கொள்வதுப்போன்றும், மகன் செழியின் அப்பாவின் நடத்தையை தெரிந்துக்கொள்வது போன்று சீரியல் ஒளிப்பரப்பாகிவருகிறது.


இந்நிலையில் தான் அப்பாவியான பாக்யாவை ஏமாற்றும் கோபியை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் திட்டி தீர்த்துவருகின்றனர். குறிப்பாக கோபி ரோலில் நடிக்கும் சுதிசை திட்டாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். இந்த சூழலில் தான் கோபியின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது. விஜய் டிவியின் பாக்யலெட்சுமி சீரியலில் மக்களின் பிரபலமான சுதிஷ், இதற்கு முன்னதாக பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளாராம்.  சென்னையைச்சேர்ந்த இவர் சினிமா மீது கொண்ட ஆசையில் மின்சாரப்பூவே படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். இதனையடுத்து ஏஜிஆர் படத்தில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைக்கொண்ட இவர் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இப்படி சினிமாத்துறையில் வலம் வந்த சுதிஷ், அடுத்ததாக கடந்த 2000 ஆம் ஆண்டில் சின்னத்திரையில் தனது பயணத்தைத் தொடங்கினார். சன்டிவியில் ஒளிப்பரப்பான மந்திர வாசல் தான் இவரது முதல் சீரியலாக அமைந்தது. இதன் பின்னர், சூலம், கல்யாண பரிசு 2, ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், குலதெய்வம், பொன்னூஞ்சல் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளதோடு மாடலிங் மற்றும் சில விளம்பரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



இப்படி பல்வேறு சீரியல்கள் மற்றும் பல துறைகளில் கால்பதித்துள்ள சுதிஷ் இதுவரை மக்களிடம் பிரபலமாகாமல் பாக்யலெட்சுமி என்ற ஒரு சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்ததன் காரணமாக பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் தான் தற்போது நடிகர் சதீஷ், முதன் முதலாக நடித்த மந்திர வாசல் தொடரின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது. இப்புகைப்படத்தில் மிகவும் இளமையாக இருப்பதோடு தோற்றமளிக்கும் இவர் 90 களில் மாஸ் ஹிரோவாக வலம் வந்திருக்கிறார் என்பது போன்ற கருத்துகளை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.