தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவில், "இனியா எழிலோடு படம் பார்க்க போயிருந்தோம் என்று கோபியிடம் சொல்ல, அதைக் கேட்ட பாக்யா கோபியிடம் ஏன் படம் பார்க்க வரவில்லை என்று கேட்கிறார். அதற்கு எழில்தான் தன்னை வரவேண்டாம் என்று சொன்னதாக கோபத்துடன் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் பாக்யா, எழிலை கோபியிடம் மன்னிப்பு கேட்க சொல்லி அவருடன் பேசாமல் இருக்கிறார். இதைக்கேட்ட எழில் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்" இவ்வாறாக அந்த ப்ரோமோ முடிகிறது. 


 



விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசி ஒருவர் தன் வாழ்கையில் சந்திக்கும், பிரச்னைகளை மையமாக கொண்டு இந்தத்தொடர்  நகர்கிறது. கதையின் மைய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி கேரக்டரில் சுசித்ராவும், அவரது கணவர் கோபிநாத் கேரக்டரில் ராஜூவும் நடித்து வருகின்றனர்.


திருமணமான பின்னரும், முன்னாள் காதலி ராதிகாவுடன் சுற்றும் கோபிநாத், அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இதனால் தனது மனைவியான பாக்யாவை விவாகரத்து செய்ய முயல்கிறார்.


 






இதை அறியாத வெகுளி பாக்யா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு குடும்ப நல நீதிமன்றம் வரை சென்றுவிடுகிறார். சூழ்நிலை இப்படி இருக்க, பகலில் ராதிகா வீட்டில் இருந்த கோபிநாத், இரவில் தன் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில்  இப்போதெல்லாம் ராதிகா வீட்டிலேயே இருந்து விடுகிறார்.


இதை பாக்யா கேள்வி கேட்க,கோபி அதை தனது அதட்டலால் அடக்கி விடுகிறார். தற்போது எழிலும் கோபிக்கு எதிராக திரும்பியிருக்கிறார்.  சூழ்நிலை இப்படி நகர்ந்து கொண்டிருக்க, நடுவில் பாக்யா, எழில், ஜெனி குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண