AV33 | ஷூட்டிங் ஸ்பாட்டில் காயமடைந்த அருண் விஜய் ! - சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவு!

கிராமத்து கதை பின்ணணியில் உருவாகி வரும் இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் ஹரி முதன் முதலாக இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்

Continues below advertisement

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறியப்பட்டாலும் தொடந்து தனக்கான அடையாளத்தை பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய்.  1995 ஆம் ஆண்டு முதலே அருண் விஜய் நடித்துக்கொண்டிருந்தாலும், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை மக்கள் மத்தியில் வாங்கிக்கொடுத்தது.  அந்த படத்தில் அவர் ‘விக்டர்’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஜித்திற்கு வில்லனாக நடித்த அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். மேலும் படம் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வந்த அவரை ரசிகர்கள் சூழந்துக்கொண்டு பாராட்டிய தருணத்தில் அவர் நெகிழ்ந்து அழுத புகைப்படங்களும் வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களை கலக்கின. 

Continues below advertisement

தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய்  33 (AV 33)  என்ற படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து கதை பின்ணணியில் உருவாகி வரும் இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் ஹரி முதன் முதலாக இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அருண் விஜய்க்கு படப்பிடிப்பு தளத்தில்  காயம் ஏற்பட்டதாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஒரு மணி நேரம் படப்பிடிப்பு தளத்தில் கார்டியோ உடற்பயிற்சி செய்து ஓய்வெடுத்துக்கொண்டதாகவும். இந்த காயம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு எவ்வித பளு தூக்கும் உடற்பயிற்சியும் தன்னால் செய்ய முடியாது என வருத்தமாக தெரிவித்துள்ளார் அருண் விஜய் . 



அருண் விஜய் மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படம், கிராமத்து கதையை மையமாக  கொண்ட கதை. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். அருண் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார். இது தவிர யோகி பாபு , ’குக் வித் கோமாளி ‘ புகழ் , ராதிகா சரத்குமார், கருடா ராம் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.  கொரோனா  முதல் அலையில் வழங்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம்  இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கின. ஆனால் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தடைப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள மீண்டும் அரசு அனுமதி அளித்ததால் வருகிற  ஜூலை 28 ஆம் தேதி படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.  ராமேஸ்வரம் , தூத்துக்குடி மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருகிறது. ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் கூட சமீபத்தில் அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola