தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் அரவிந்த்சாமி. 1991 ஆம் ஆண்டு வெளியான தளபதி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் . அதன் பிறகு தளபதி, ரோஜா, மறுபடியும் ,பம்பாய்,இந்திரா, மின்சார கனவு, என் சுவாச காற்றே என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நெகட்டிவ் ஷேடில் மாஸாக  அரவிந்த் சாமி களமிறங்கிய போகன் , தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது பல மாஸ் கிரைம் திரில்லர் திரைப்படங்களை அரவிந்த்சாமி கைவசம் வைத்திருக்கிறார்.




அதுமட்டுமல்லாமல் நடிகர் ரஜினியின் 167 வது திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் முக்கிய அம்சமாக ரஜினியும் அரவிந்த் சாமியும் 31 ஆண்டுகள் கழித்து இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மற்றும் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் அரவிந்த்சாமி.


கேள்வி: ரஜினியோட 167 வது படத்துல நீங்க நடிக்கிறீங்கன்னு செய்தி வழியாக இருக்கு. இதனால் மக்கள் அனைவருமே பெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் ஏனென்றால் நீங்கள் ரஜினியோட 31 வருடங்கள் கழித்து இணைவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இது உண்மையா இல்லையா சார்.


பதில்: செய்தி வெளியாகியிருக்கும் நானும் கேள்விப்பட்டேன். செய்தி உண்மைதான்.


 






கேள்வி: மணிரத்தினம் திரைப்படத்தில் நீங்க பல படங்களை நடித்திருக்கிறீர்கள் தமிழ் சினிமாவை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க படம் பொன்னியின் செல்வன் இந்த படத்தில் நீங்க ஏன் நடிக்கலாம் சார் ,அல்லது மணிரத்தினம் கீரை நீங்க கேட்டீங்களா எனக்கு ஒரு கேரக்டர் வேண்டும் என்று.


பதில்: மணிரத்னம் சாருக்கு நல்லாவே தெரியும் யாரை எந்த கேரக்டரில் நடிக்க வைக்கணும் என்று, பொன்னியின் செல்வன் என்று மட்டுமல்லாமல் மணிரத்னம் சார் கூட ஒர்க் பண்றதே ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ்தான் அதனால பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கேரக்டர் குடுக்கல என்று எல்லாம் எனக்கு தோன்றவில்லை என பதில் கொடுத்திருக்கிறார்.