Aranthangi Nisha : மகனை எதுக்கு ஹாஸ்டல்ல சேர்த்தேன்னு கேக்குறீங்களா? உண்மையை உடைத்த அறந்தாங்கி நிஷா..
அறந்தாங்கி நிஷா தனது மகனை ஏன் ஹாஸ்டலில் சேர்த்திருக்கிறேன் என்பது குறித்தான விளக்கத்தை தனது யூடியூப் சேனலில் பேசி வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப் போவது யார் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்தவர் அறந்தாங்கி நிஷா. அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். இவரது வருகைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், அவருக்கு தொகுப்பாளர் வாய்ப்பும் கொடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் நிஷா தனது கணவருடன் களமிறங்கினார். இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
Just In




இதனால் வீட்டில் இருந்த நிஷா கருப்பு ரோஜா என்ற யூடியூப் சேனலை தொடங்கி அதில் தனது அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக மாற்றி பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. நிஷாவுக்கு அஷ்ரத் என்ற மகனும், சஃப்ரா என்ற மகளும் உள்ளனர். இதில் அஷ்ரத்தை நிஷா ஹாஸ்டலில் சேர்த்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் நிஷா அந்த வீடியோவில் மிக விரிவாக பேசியிருக்கிறார். மேலும் தனது மகன் அஷ்ரத்த்தின் பள்ளிக்குச் செல்வதும் பின்பு அவரை அழைத்து வந்து சாப்பாடு கொடுப்பது தொடர்பான வீடியோ பதிவுகளும் அதில் அடங்கியிருக்கிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்