நிறைமாத கர்ப்பிணியான நடிகை அலியா பட், குழந்தைப்பேறுக்காக மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


பாலிவுட்டின் கபூர் குடும்பத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் ரன்பீர் கபூர். தனது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தினை நாடு முழுவதும் கொண்டுள்ளார்.


இவரும் பாலிவுட்டின் முக்கிய  நடிகைகளுள் ஒருவரும் இயக்குநர் மகேஷ் பட்டின் மகளுமான அலியா பட்டும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் மகிழ்ச்சியாக திருமண பந்தத்தில் நுழைந்தனர்.


 






திருமணத்தைத் தொடர்ந்து ஜூன் மாதம் தான் கருவுற்றிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அலியா அறிவித்து தங்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எனினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அலியா, முன்னதாக  தனது டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா படங்களின் ப்ரொமோஷன் பணிகளில் கலந்து கொண்டு அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.


கடந்த மாதம் அலியாவுக்கு வளைகாப்பு விழா அவரது மும்பை இல்லத்தில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் சூழ நடந்து முடிந்தது. அந்தப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தன.


இந்நிலையில் அலியா பட் தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைப் பேறுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.


 






அலியாவுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது தாய் சோனி ராஸ்தான் ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்நிலையில் இவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.