ரன்பீர் கபூர்


பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தில் நடித்திருந்தார். அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியிருந்தார். அர்ஜூன் ரெட்டி படத்தைப் போலவே அனிமல் படமும் சர்ச்சைக்குரிய படமாக மாறியது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரைப் பிரபலங்கள் இந்தப் படத்தை விமர்சித்திருந்தார்கள். அதே நேரம் அனிமல் படம் பாக்ஸ் ஆபிஸில் 900 கோடிவரை வசூல் செய்தது. ரன்பீர் கபூர் நடித்த படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக அனிமல் படம் மாறியது. பாலிவுட்டில் பெண்களால் அதிகம் ரசிக்கப் படும் சாக்லேட் பாய் நடிகர் ரன்பீர்  இப்படத்தில் அவர் நடித்தது தொடர்பாக பல்வேறு பல கருத்துக்களைத் தெரிவித்தனர். தற்போது முதல் முறையாக அனிமல் படத்தில் தான் நடித்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். 


நான் குட் பாயாக இருக்க விரும்பவில்லை






சமீபத்தில் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரன்பீ கபூர் “ அனிமல் படத்தில் நான் நடித்ததற்கு முக்கிய காரணம் எனக்கு இருந்த குட் பாய் இமேஜை நான் மாற்ற நினைத்தேன். நல்ல சமூக கருத்துக்களை சொல்லும் கதாபாத்திரங்களில் படங்களில் மட்டுமே நான் இது வரை நடித்து வந்திருக்கிறேன். வயதிற்கு வருபவர்களை கவரும் ரொமாண்டிக் படங்களில் வரும் குட் பாயாக தான் நான் இதுவரை நடித்து வந்தேன். அந்த இமேஜை நான் மாற்ற நினைத்தேன். அனிமல் படத்தின் கதையை முதல்முறையாக நான் கேட்ட்போது இப்படிபட்ட ஒரு போல்டான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் மக்கள் இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நான் நடிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு பயமிருந்தது. அனிமல் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்றாலும் இன்னொரு தரப்பு ரசிகர்கள் இந்தப் படத்தை விமர்சித்தார்கள். திரைத்துறையில் என்னுடைய நண்பர்கள் சிலரும் நான் இந்தப் படத்தில் நடித்தது அவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக கூறினார்கள் . என்னுடைய வாழ்க்கையின் இந்த கட்டத்தில் நான் யாருடனும் விவாதம் செய்யும் நிலையில் இல்லை. நான் நடித்த படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் அதை எதிர்த்து வாதிடமாட்டேன். மன்னித்துவிடுங்கள் அடுத்தமுறை இன்னும் சிறப்பாக முயற்சி செய்கிறேன். “ என்று ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார்.