சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் மிகவும் திறமைசாலியாக, தைரியசாலியாக வனிதா விஜயகுமார் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், யூடுயுப் போன்ற சமூக வலைத்தளங்களில் சமையல் சார்ந்த நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கி எண்ணற்ற ரசிகர்களைத் தன் பக்கம் கொண்டுள்ளார்.  விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலையும் வென்றார். யூடியூப், சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து தளங்களிலும் கலக்கி வரும் வனிதா இன்ஸ்டாவிலும் செம ஆக்டீவாக இருப்பார். அன்றாட நிகழ்வுகள், சினிமா அப்டேட்கள் என அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாவில் அவர் பதிவிடுவது வழக்கம்






இந்நிலையில் தான் பின்பற்றும் மதம் குறித்த அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், சந்தோஷமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக நான் சில வருடங்களுக்கு முன்பே புத்த மதத்தை பின்பற்றினேன். அதற்கு பின் அதைப்பற்றி மறுபரிசீலனைசெய்ய எதுவுமே இல்லை என பதிவிட்டுள்ளார். மேலும் புத்திசம், கோவில் பயணம் போன்ற ஹாஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


சமீபத்தில் காத்து என்ற படத்தின் ஐட்டம் டான்ஸ் ஒன்றில் ஆடினார் வனிதா. இது குறித்து தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர் இது தன்னுடைய முதல் ஐட்டல் பாடல் என்று குறிப்பிட்டார். ’கலரு கோழிக்குஞ்சு’ என்று தொடங்கும் இந்த பாடலை கானா பாலா பாடியுள்ளார். தற்போது ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்துகொண்டார். பின்னர் அவர் வெளியேறினார்.அதே நேரத்தில் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து கமலும் விலகினார். விக்ரம் படத்துக்காக தான் வெளியேறியதாக கமல் குறிப்பிட்டிருந்த நிலையில் அதுகுறித்து வனிதாவும் தன்னுடைய கருத்தை பதிவிட்டது பிக்பாஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.






அதில்,'' கமல்ஹாசனுக்கு அதிகபட்சம் 3 அல்லது 4 நாட்கள்தான் ஷூட்டிங் இருக்கும். விக்ரம் படத்தின் தயாரிப்பாளரே அவர்தான். அவரால் நேரம் ஒதுக்க முடியாதா? அதற்குள் ஏன் விலகினார். பிக்பாஸ் 6க்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவரு கிளம்பியதற்கு வேறு காரணம் இருக்கிறது. நிகழ்ச்சி தவறான பாதையில் செல்கிறது. அதனால்தான் அவர் கிளம்பிவிட்டார். நிகழ்ச்சியை தவறாக கொண்டு செல்வதை நாங்களே உணர்ந்தோம். பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே அதனை பேசிக்கொண்டோம். இந்த நிகழ்ச்சி செல்லும் விதமே சரியில்லை. நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் வெளியேறிவிட்டேன்" என்றார்.