நடிகை துனிஷா ஷர்மா, பிரபல தொலைக்காட்சித் தொடர்களான 'சக்ரவர்தின் அசோக சாம்ராட்', 'பாரத் கா வீர் புத்ரா - மஹாராணா பிரதாப்' மற்றும் 'அலி பாபா தஸ்தான்-இ-காபூல்' போன்றவற்றில் நடித்து பிரபலமடைந்தவர்; 


இவர் கடந்த சனிக்கிழமை படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இணையதளத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது; மேலும் அது தொடர்பாக பல வதந்திகளும் பரவி வந்தன; அதில் ஒன்றுதான் நடிகை துனிஷா தற்கொலைக்கு காரணம் அவர் கர்ப்பமாக இருந்தது என்பது. இந்த செய்தி சமூகவலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது. 


தற்கொலை செய்து கொள்வதற்கு முன், துனிஷா தனது புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து இருந்தார்; அதில், “ஏதோ ஒன்றை தீவிரமாக நேசிப்பவர்கள், அதனால் ஊக்கத்துடன் செயல்படுபவர்கள் எப்போதும் ஓய மாட்டார்கள்.” என்று  குறிப்பிட்டிருந்தார்.


 


 






 


இந்த நிலையில், துனிஷா சர்மாவின் தாய் துனிஷாவின் காதலன் ஷுசன் முகமது தான் தனது மகள் தற்கொலைக்கு காரணம் என்று போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ‘இருவரும் காபூல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைந்து நடித்து வந்தனர்; அப்போது இருந்தே இருவரும் காதலித்து வந்தனர்; அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் பலவை வரும்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை, ஐபிசி 36 பிரிவின்படி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஷுசன் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தினர். 


தற்கொலைக்கு காரணம் :


துனிஷாவின் காதலனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், துனிஷா கர்ப்பமாக இருந்ததாகவும் இதனால் காதலன் ஷுசன் முகமது தற்போது குழந்தை வேண்டாம் என்று சொல்வதாகவும் அதனால் தான் துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார் என பல வதந்திகள் இணையத்தில் பரவி வந்தன. திரிஷாவின் காதலனை விசாரிக்கும் பொழுது பல அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். 


அதில் ஷுசன் கான், “ஷ்ரத்தா வாக்கர் தனது காதலனால் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு தான் , எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்து நாங்கள் உறவை முறித்துக் கொள்ள முடிவெடுத்தோம். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பே ஒரு முறை துனிஷா ஷர்மா தற்கொலை செய்யும் முயற்சி செய்ததாகவும் தான் அவரை காப்பாற்றியதாகவும் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்; 


 






பிரேத பரிசோதனை அறிக்கை


நடிகை துரிஷா சர்மாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த நிலையில், அதில் துனிஷா கர்ப்பமாக இல்லை என்றும் இறப்பிற்கு காரணம் மூச்சுத்திணறல் தான் என்றும் அந்த பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.