Actress Trisha: காங்கிரஸில் இணைகிறாரா த்ரிஷா? - தாயார் கொடுத்த விளக்கம்!

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா, அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

நடிகை பிரபல தேசிய கட்சியில் இணையவுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது அம்மா விளக்கமளித்துள்ளார். 

Continues below advertisement

1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து கோலிவுட்டில் தலை காட்டிய த்ரிஷா, 2002 ஆம் ஆண்டு  வெளிவந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அவர் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தது லேசா லேசா படம் தான். தொடர்ந்து ரஜினி,கமல், விஜய்,அஜித், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி வரை அவர் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நடிகையாகவே உள்ளார். 

தொடர்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா, அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனி கதாநாயகியாகவும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். 39 வயதாகும் த்ரிஷா இதுவரை திருமணம் செய்யாத நிலையில், அவரின் திருமண செய்திக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். 

இதற்கிடையில் நடிகை த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் ஒன்று இணையதளங்களில் தீயாக பரவியது. இது அவரது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் திரையுலகினரிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்து த்ரிஷா தரப்பில் எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் பலரும் குழப்பமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக த்ரிஷா அம்மா உமா கிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், அப்படி எல்லாம் இல்லை.அந்த தகவல் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இப்படி ஒரு தகவல் எங்கிருந்து வருகிறது என எனக்கும் சொல்லுங்கள் என அவர் சிரித்துக் கொண்டே சொல்லியுள்ளார். இதன்மூலம் த்ரிஷா அரசியல் பயணம் குறித்த தகவலுக்கு தொடங்கிய இடத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola