வடிவேலுவின் நகைச்சுவையில் உங்களுக்கு எது பிடிக்கும் என யாராவது கேட்டால்?..அவரது ரசிகர்களால் விரல் விட்டு எண்ணி விட முடியுமா என்ன ? அவ்வளவு பாத்திரங்கள்..மாறுபட்ட நடிப்புகள் என கதாபாத்திரத்தோடு ஒன்றியல்லவா ஸ்கோர் செய்திருக்கிறார் வடிவேலு. இன்று மீம்ஸின் நாயகன் என அழைக்கப்படும் வடிவேலுவின் நடிப்பில் வெளியான அய்யோ...வலிக்குதுடி மாலா.. என்னும் காமெடியின் வசனம் , அரசியலிலும் புகுந்து விளையாடி வருகிறது.  கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்தில் இடம்பெற்ற , அந்த நகைச்சுவையில் நடிகர் வடிவேலுவும் விவேக்கும் அடிபட்ட நிலையில் படித்திருக்க, வடிவேலுவின் ஜோடியாக தாரணியும் , மாமியாராக ரேவதி சங்கரன் நடித்திருப்பார். 




அந்த சீனில் நடிக்கும் பொழுது வடிவேலுவின் கெட்டப்-ஐ பார்த்தே எல்லோரும் முதலில் சிரித்துவிட்டார்களாம். முழுவதும் கட்டுப்போட்டு அவர் நடந்து வந்த விதம் மிகவும் வேடிக்கையாக இருக்க பார்த்து பார்த்து சிரித்தார்களாம் அங்கிருந்தவர்கள் . அதையெல்லாம் கண்ட்ரோல் செய்துக்கொண்டு மீண்டும் நடிக்க துவங்கும் பொழுது வடிவேல் தனது பின்பக்கத்தை உயர்த்தியபடி ஒரு ஆக்‌ஷன் செய்தாராம் அதனை கண்டு மீண்டும் ’கொள்ள்ள்..’ என சிரித்துவிட்டதாக கூறுகிறார் சக நடிகையான தாரணி. 


சில பல டேக்குகளுக்கு பிறகு மீண்டும் அந்த சீனில் நடித்தவர்களை , மீண்டும் சிரிக்க வைக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே வடிவேலும் அவ்வாறு செய்தார், அவர் எங்களை நடிக்க விடாமல் செய்ய அவ்வளவும் முயற்சி செய்தார் என்கிறார், வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்த தாரணி. மேலும் வடிவேலு சொன்ன “ உங்க அம்மாவை ஃபேனை 12 ல வைக்க சொல்லுடி .’ என்னும் வசனம் வடிவேலுவாக சேர்த்துக்கொண்டாராம். அது கூடுதல் சிரிப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார் தாரணி. வடிவேலு வேதனையில் படுத்திருக்க அவரிடம் வந்து “குத்தால அறிவியில குளிச்சது போல் இருக்குதா..” என பாடல் பாடுவார் நடிகை ரேவதி . 




அவரை பற்றி பகிர்ந்த நடிகை தாரணி , அவர் அந்த சமயங்களில் எங்களுக்கு அம்மா போலவே இருந்தார். நல்ல பாடகி என்றார். சீரியலில் நடித்துக்கொண்டிருந்த நடிகை தாரணி தனது இளம் வயதிலேயே விஜய்க்கு அம்மாவாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் , அம்மாவாக நடித்திருப்பார். இறுதியில் நாயகி சங்கீதாவின் அம்மாதான் இவர் என ட்விஸ்டுகள் எல்லாம் வரும் .  மிகப்பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிக்கும் பொழுது நமக்கான காதாபாத்திரம் குறித்து சொல்ல மாட்டார்கள் என்னும்  தாரணி. அப்படித்தான் விக்ரமன் அழைத்த பொழுதும் சீரியல் முடித்துவிட்டு சென்றாராம். மேக்கப் போடும் பொழுதுதான் வயதான தோற்றம் என தெரிய வந்ததாம் . அதன் பிறகு நடிக்க யோசித்ததாக சொல்லும்  தாரணி , விக்ரம் சாருக்காக நடித்தேன் என்கிறார்.