நடிகர் நாகசைதன்யாவுடனான மணமுறிவு, மயோசிட்டிஸ் பாதிப்பு என தன் தனிப்பட்ட வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து வரும் நடிகை சமந்தா கடந்த சிலமாத காலமாக ஆன்மீகம் மற்றும் உடற்பயிற்சி என இரண்டிலும் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். 


கோயில்களுக்கு விசிட் அடிப்பது, தியானம் என ஒருபுறம் ஆன்மீகத்தை நாடுவதுடன் மற்றொருபுறம் தன் மயோசிட்டிஸ் பாதிப்பையும் பொருட்படுத்தாது  ஒர்க் அவுட், யோகா என வலம் வந்து இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறார்.


அந்த வகையில் சமந்தா முன்னதாக தன் வீட்டில் அமர்ந்து லிங்க பைரவியை வழிபடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், ”சில சமயங்களில் சுப்பர் ஹ்யூமன் சக்தியெல்லாம் தேவையில்லை. நம்பிக்கை உங்களை இட்டுச் செல்லும். நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருக்கும். நம்பிக்கை உங்கள் ஆசிரியராகவும் உங்கள் நண்பராகவும் மாறும்.  நம்பிக்கையே உங்களை சூப்பர்ஹியூமனாக மாற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.


 






சமந்தாவின் இந்தப் பதிவு இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது. சென்ற மாதம் இதே போல் பழனி கோயிலுக்கு சமந்தா வருகை தந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.


சமீபத்தில் தான் பழனி தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், அங்கு வருகை தந்த சமந்தா பழனி கோயிலில் உள்ள 600 படிகளிலும் ஏறி சூடமேற்றி பிரார்த்தனை செய்தார். அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். 


மற்றொருபுறம் தன் கரியரில் கவனம் செலுத்தி கடமையே கண்ணாக நடித்து வரும் சமந்தா, வருண் தவானுடன் சிட்டாடல், அக்‌ஷய் குமாருடன் பெயரிடப்படாத படம் என பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகிறார்.


முன்னதாக மும்பையில் வேலை நிமித்தமாக சமந்தா சொகுசு வீடு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.


மேலும் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.  மற்றொருபுறம் விஜய் தேவரகொண்டாவுடன் மகாநதி படத்துக்குப் பிறகு குஷி படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சமந்தா. 


மேலும் விக்கி கௌஷலுடன் த இம்மார்ட்டல் அஸ்வத்தாமா எனும் புராணக்கதையில் சமந்தா நடிக்க உள்ளார். இந்தப் படம் வரும் 2024ஆம் ஆண்டு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Oscars 2023: இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கிறதா? எந்தெந்த பிரிவில் என்னென்ன படங்கள் வெல்லும்? - கணிப்புகள் சொல்வது இதுதான்...!