நடுங்கும் குளிரைப் பொருட்படுத்தாமல் உறை பனியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நீரில் மூழ்கி எழும் வீடியோ வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.


ஏர்டெல் விளம்பரம் ஒன்றில் பலரையும் ஈர்த்து, தொடர்ந்து டோலிவுட்டில் அனைத்து டாப் ஸ்டார்களுடன் நடித்து வெற்றிக்கொடி கட்டி, தமிழ் சினிமா, இந்தி சினிமா எனக் கலக்கி தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். 


கோலிவுட்டில் இறுதியாக செல்வராகவன் இயக்கத்தில்  சூர்யா, சாய் பல்லவியுடன் இணைந்து  என்.ஜி.கே படத்தில் நடித்த ரகுல் ப்ரீத், தற்போது நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பணிகளில் பிஸியாக உள்ளார். 


மற்றொருபுறம் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்துள்ள அயலான் திரைப்படமும் பல இழுப்பறிகளைக் கடந்து விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் முன்னதாக பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றின் மூலம் சமூக வலைதள சென்சேஷனாக மாறியுள்ளார்.


ஏற்கெனவே காயம் ஏற்பட்டு தோள்பட்டையில் கட்டுடன் வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், க்ரயோதெரப்பி எனும் தசைகளுக்கான சிகிச்சையை -15 டிகிரி செல்சியஸில் இப்படி முங்கி எழுந்து மேற்கொண்டுள்ளதாகவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 






இந்நிலையில் பிகினி உடையில் தான் உறைபனியில் முங்கும் இந்த ஒற்றை வீடியோவைப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் ரகுல் லைக்ஸ் அள்ளி வருகிறார். முன்னதாக ரகுல் தன் தோள் பட்டை பகுதியில் கட்டுடன் வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 


தன் இன்ஸ்டா பக்கத்தில் ரகுல் தொடர்ந்து ஒர்க் அவுட்  வீடியோக்களை பகிர்ந்து வரும் நிலையில், உடற்பயிற்சியின்போதோ அல்லது ஷூட்டிங்கின்போதோ அவருக்கு அடிபட்டிருக்கலாம் என்றும்,  
கழுத்து, முதுகு வலிக்காக அணியும் கே டேப்பை ரகுல் அணிந்துள்ளதாகவும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் பகிர்ந்து வந்தனர்.


இந்நிலையில், தசைப்பிடிப்புக்காக முன்னதாக சமந்தா ஐஸ் டப்பில் மூழ்கி எழுந்த சிகிச்சை போல், ரகுல் ப்ரீத்தும் செய்திருக்கலாம் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்தியில் தற்போது  ‘மேரி பத்னி கா ரீமேக்’ எனும் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிகர் அர்ஜூன் கபூர் உடன் இணைந்து  ரகுல் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.