பிரியங்கா மோகன்


 நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் சமூக வலைதளத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது எஸ்.ஜே. சூர்யா குஷி 2 படத்தை இயக்கினால் அதில்  நடிகர் பவண் கல்யானை தான் நடிக்க வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இதனால் விஜய் ரசிகர்கள் கோபமடைந்து பிரியங்கா மோகனை விமர்சிக்கத் தொடங்கினார்கள். தற்போது இது குறித்து பிரியங்கா மோகன் விளக்கமளித்துள்ளார்.


குஷி 2 சர்ச்சை பற்றி பிரியங்கா மோகன்


"  சரிபோதா சனிவாரம் படத்தின் நிகழ்ச்சியில் நான் பேசிதை எல்லாரும் தவறாக புரிந்துகொண்டார்கள். தற்போது நான் பவண் கல்யான் நடிக்கும் ஓஜி படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறேன். அதனால் அன்று நான் மேடையில் ஏறியதும் எல்லாரும் 'ஓஜி' 'ஓஜி' என கத்தத் தொடங்கிவிட்டார்கள். அதே நிகழ்ச்சியில் எஸ்.ஜே சூர்யாவும் இருந்தார். ஏற்கனவே எஸ்.ஜே சூர்யா ஒரு நிகழ்ச்சியில் குஷி 2 படத்தில் என்னை நாயகியாக நடிக்க வைக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இது எல்லாமே அங்க இருந்த ரசிகர்களுக்கு தெரியும். அவர்கள் அப்படி கத்தியதை கேட்டு எனக்கு உடனே நியாபகம் வந்தது குஷி 2 படம்தான். தெலுங்கு ரசிகர்களிடம் பேசியதால் குஷி 2 படத்தை பவண் கல்யான் வைத்து எடுக்க வேண்டும் என்று சொன்னேன்.






ஆனால் நான் முதலில் பார்த்தது விஜய் சார் நடித்த குஷி படத்தைதான். அந்த படத்தைப் பார்த்துவிட்டு நான் விஜய் ஃபேன் ஆகிட்டேன். விஜயின் நிறைய படங்கள் எனக்கு பிடித்த படங்கள். அதுவே அன்று நான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்திருந்தால் விஜய் என்றுதான் சொல்லியிருப்பேன். ஆனான் நான் சொன்னது தவறாக புரிந்துகொண்டு விட்டார்கள். " என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். உண்மை தெரியாமல் இப்படி திட்டிட்டீங்களே விஜய் ஃபேன்ஸ்.


தீபாவளி ரிலீஸ்


பிரியங்கா மோகன் தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். எம் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்துடன் கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் , சிவகார்த்திகேயன் நடித்த அமரன் , துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களும் வெளியாகின்றன.