சர்வதேச அளவில் பிரபலமாக மாறியுள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தன்னுடைய கார் கலெக்‌ஷனில் இருந்து ஒரு சொகுசு காரை விற்பனை செய்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். தன்னுடைய மிகவும் விலை அதிகம் கொண்ட காரான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரைச் சமீபத்தில் விற்பனை செய்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த 2013ஆம் ஆண்டு, இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது ஆசை கொண்டு, இதனை வாங்கினார் நடிகை பிரியங்கா சோப்ரா.


பெங்களூருவில் பல்வேறு சொகுசு கார்களை வைத்திருக்கும் தொழிலதிபர் ஒருவரிடம் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகை பிரியங்கா சோப்ரா விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தான் அமெரிக்காவில் குடியேறியுள்ளதால், தனது வீட்டிலேயே கார் நின்று கொண்டிருப்பதைக் கணக்கில் கொண்டு, அவர் அதனை விற்பனை செய்துள்ளார்.  






நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விற்பனைத் தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில், அந்த மாடலை அவர் வாங்கிய போது அதன் விலை சுமார் 4.5 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு நிறத்திலான வடிவத்தையும், மேற்கூரையில் வெள்ளி நிறத்திலுமான இந்த காரில் ஸ்டார்லிட் சீலிங், ஸ்டார்டஸ்ட் கார்பெட்ஸ் முதலானவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்தக் காரில் பி.எம்.டபிள்யூ தயாரிப்பில் உருவாக்கப்பட்ட 6.6 லிட்டர் அளவிலான ட்வின் டர்போ v1 எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதால், இந்தக் காரில் இருந்து 563 bhp ஆற்றல் வெளிப்படுத்தப்படுகிறது. இது நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மிகவும் பிடித்தமான கார் எனக் கூறப்படுகிறது. 



மும்பையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது தாய் மது சோப்ரா ஆகியோர் இந்தக் காரில் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.