பிரியங்கா மோகன்


சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன் , தொடர்ந்து டான் , கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்தபடியாக இவர் நடித்துள்ள பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷனின் போது செல்ஃபீ கேட்ட ரசிகர்கர் ஒருவரிடம் கடுமையாக நடந்து கொண்டது சமூக வலைதளத்தில் பேசு பொருளாகியுள்ளது. 


செல்ஃபீ கேட்ட ரசிகரை கண்டித்த பிரியங்கா மோகன்


 ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றை முடித்துக் கொண்டு பிரியங்கா மோகன் காரில் புறப்பட்ட போது ரசிகர்கள் அவரிடம் செல்ஃபீ கேட்டு தொந்தரவு செய்தார்கள். அப்போது ஒரு ரசிகர் காருக்கு உள்ளே வருவது போல் நெருங்கி வந்ததால் பிரியங்கா மோகன் கடுப்பாகினார். காருக்குள்ள வந்து உட்காருங்க என்று அவர் கடுமையாக பேசினார். பின் அந்த ரசிகருக்கு கடுமையான முகத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிய நிலையில் பிரியங்கா மோகனை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். 


இவருக்கு சும்மாவே நடிக்க வராது. ஒரு செல்ஃபீ கேட்டதற்கு இவ்வளவு கோபமாக நடந்துகொள்ள வேண்டுமா என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார்கள். தொடர்ந்து அடுத்த  நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் ரசிகர் ஒருவர் அவரிடம் செல்ஃபீ கேட்டுள்ளார். அப்போது பிரியங்கா மோகன் அவரிடம் கடுமையாக ஏதோ பேசினார். பல்வேறு நடிகைகளுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் பிரியங்கா மோகன் . 


பிரியங்கா மோகனை பின் தொடர்ந்த ரசிகர்


தற்போது விமர்சனங்கள் குறித்து நடிகை பிரியங்கா மோகன் தரப்பு விளக்கம் வெளியாகியுள்ளது. செல்ஃபீ கேட்ட அந்த ரசிகர் தனது வீடு வரை தன்னை பின் தொடர்ந்து வந்ததாகவும் அதனால் அவரிடம் அப்படி எல்லாம் செய்யக்கூடாது என பிரியங்கா மோகன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் இன்னொரு பக்கம் பிரியங்கா மோகனுக்கு ஆதரவு குரல்களும் எழுந்துள்ளன. 






நடிகைகளை திரைப்படங்களில் பார்த்து ரசிப்பதுடன் இல்லாமல் செல்ஃபீ கேட்டு அவர்களை இப்படி தொந்தரவு செய்வது சரியில்லை. மேலும் வீடு வரை பின் தொடர்வது அந்த நடிகைக்கு பதற்றத்தை உண்டாக்குவது இயல்புதான் என்கிற கருத்துக்களும் எழுந்துள்ளன.