நடிகை ப்ரணிதா முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 


குழந்தை தொடர்பான புகைப்படத்தை பதிவிட்ட ப்ரணிதா குழந்தைக்கு  ‘அர்னா’ என்று பெயர் வைத்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.


 


 







தமிழில் கார்த்தியுடன்  ‘சகுனி’ சூர்யாவுடன் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரணிதா. இவர் கடந்த ஆண்டு பெங்களூர் தொழிலதிபர் நித்தின் ராஜூவை திருமணம் செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து தனது கணவரின் பிறந்தநாளில் கர்ப்பமான செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த ப்ரணிதா தொடர்ந்து தனது கர்ப்பகால புகைப்படங்களையும், அது தொடர்பான தனது செய்திகளையும் தொடர்ந்து பகிர்ந்து வந்தார்


 






இந்த நிலையில் அவர் அண்மையில் பெண் குழந்தையை பிறந்தது. அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் மருத்துவர்களுக்கு நன்றி கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. 


 






பீமா அமாவாசையான கடந்த வெள்ளிக்கிழமை தனது கணவருக்கு பாத பூஜை செய்து, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.