நடிகை பாவனி தனக்கு அமீரிடம் பிடிக்காத விஷயம் பற்றி மனம் திறந்துள்ளார். 


விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி'  சீரியலின் மூலம் அறிமுகமான பாவனி, அதே சேனலில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து காதல் கணவரின் தற்கொலையால் மன அழுத்தத்தில் இருந்த பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டார்.


இதே சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் வந்த நடன இயக்குநர் அமீர் ஆரம்பத்தில் இருந்தே பாவனியுடன் நெருங்கி பழகினார். பிக்பாஸின் போது பாவனிக்கு முத்தம் கொடுத்தது, அவரை காதலிப்பதாக கூறியது என இந்த ஜோடி பல சர்ச்சைகளில் சிக்கியது.


 






பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஒன்றாக பல இடங்களுக்கு இவர்கள் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஆனாலும் பாவனி அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளவேயில்லை. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து நடனமாடி வருகின்றனர். அமீர்- பாவனி காதல் நாளுக்கு நாள் வலுவாகி வரும் நிலையில் கல்யாணம் செய்தால் முதல் கணவருக்கு நிகழ்ந்த மாதிரி ஏதாவது அசம்பாவிதம் அமீருக்கும் நடந்து விடுமோ என நினைப்பதாக பாவனி  தெரிவித்தார். 


இதனிடையே வரும் வாரம் இந்நிகழ்ச்சி “wedding Round" என்ற தலைப்பில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அமீரும் பாவனியும் இருவரும் நடனம் ஆடி திருமணம் செய்துக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.



அமீரிடம் பிடிக்காத விஷயம்


இது தொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகியது. ஆனால் நடனத்திற்கு நடுவர்கள் கலவையான விமர்னங்களையே கொடுத்தனர். இந்த நிலையில் பாவனியிடம் அமீரிடம் பிடிக்காத விஷயம் என்ன என்று கேட்டபோது, அவருக்கு கோபம் வந்தால் எல்லாவற்றையும் தூக்கி வீசுவார். உண்மையில் நான்தான் எல்லாவற்றையும்  தூக்கி வீசவேண்டும். ஆனால் அவர் அப்படி செய்வார்.


ஆனாலும் பல நேரங்களில் அதனைக்கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாகிவிடுவார். தொடர்ந்து பேசிய அமீர், என்னைப்பற்றி ஏதும் நல்லதா சொல்லக்கூடாதா என்று கேட்ட போது,   “ நியாபகம் வந்தா சொல்றேன் என்ற பாவனி கொஞ்சம் நேரம் கழித்து, பார்ட்டி செய்யும் போது, இவர் என் பின்னாலேயே வருவார். அது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று சொல்ல அமீர் குஷியாகிவிட்டார்.