இன்றைய தமிழ் சினிமாவில் டாப் செய்திகளே நயன் தாரா - விக்னேஷ் சிவன் மற்றும் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்தான். இவர்களுக்கு பூ வைத்தது முதல் முதலிரவு கட்டிலில் பூ போட்டது வரை அனைத்தும் மிகப்பெரிய வைரலானது. 


அதிலும், நயன் தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் தண்ணீர் பாட்டில் முதல் தாலி கட்டிய அனைத்து புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அடித்து தூக்கியது. திருமணம் முடிந்து அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு விடலாம் என்று எண்ணியபோது நயன் தாரா மாடர்ன் உடையில், கழுத்தில் தாலியுடன் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரது மனதையும் கவர்ந்தார். அந்த புகைப்படங்களும் அன்றைய வாரம் முழுவதும் ட்ரெண்ட்தான். 






இப்படி ஒரு புறம் நயன் தாரா தாலியுடன் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் போட்டுதாக்க, இவர்களுக்கு முன்னதாக திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நிக்கி கல்ராணி ‘நானும் புது பெண்தான்’ என்று நீல நிற உடையுடன் கழுத்தில் மஞ்சள் நிற புது தாலியுடன் ஜொலி ஜொலிக்க தான் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்ககத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களும் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 






பெரும்பாலும், தங்கத்தில் தாலி அணிந்தால்தான் வசதி படைத்த பெண்கள் தங்களுக்கு கவுரவம் என்று நினைப்பார்கள். கழுத்தில் வெறும் மஞ்ச கயிறுடன் இருப்பதால் ஊரார் மற்றும் சொந்தகாரர்கள் தங்களை எளியவராக எண்ணுவார்கள் என்று எண்ணும் இந்த காலத்தில், மஞ்சள் கயிறுடன் மங்களகரமாக ஜொலிக்கிறார்கள் இந்த பேரழகிகள்! இதுவே ஒரு ட்ரெண்ட் ஆகவும் மாறலாம். அதை துவங்கி வைத்தவர், நயன்தாரா!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண