Just In





' நீ நடிக்க கூடாது' மகேஷ் பாபுவா இப்படி சொன்னது...அதிர்ச்சியை கிளப்பிய மனைவி நம்ரதா
திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த நம்ரதா ஷிரோத்கர் தனது கணவர் மகேஷ் பாபு சொன்னதால் நடிப்பை கைவிட்டதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்

மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. தற்போது ராஜமெளலி இயக்கும் சாகச கதையில் நடித்து வருகிறார். மகேஷ் பாபு மற்றும் பிரபல நடிகை நம்ரதா ஷிரோத்கர் இருவரும் காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இந்த தம்பதிக்கு கெளதம் , சிதாரா என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இந்தி , தெலுங்கு, கன்னடம் , தெலுங்கு , மராத்தி என அனைத்து மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த நம்ரதா திருமணத்திற்கு பின் நடிப்பை கைவிட்டது பலருக்கு அதிர்ச்சியளித்தது. சிரஞ்சீவி , சல்மான் கான் , மம்மூட்டி , அனில் கபூர் , சஞ்சய் தத் என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தனது கணவர் மகேஷ் பாபுவின் வலியுறுத்தலால் நடிப்பை கைவிட்டதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளதார். இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
நடிப்பை கைவிடச் சொன்ன மகேஷ் பாபு
1993 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் டைட்டில் வென்றவர் நம்ரதா. 2000 ஆம் ஆண்டு மகேஷ் பாபுவுடன் வம்சி படத்தில் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் நடந்தது. மகேஷ் பாபுவை விட நம்ரதா 4 வயதில் பெரியவர் மேலும் நடிகையை தனது மருமகளாக்க மகேஷ் பாபுவின் தந்தை விரும்பவில்லை. இதனால் அவர்கள் திருமணத்திற்கு நிறைய சவால்கள் எழுந்தன. " வேலைக்கு போகாத பெண் தான் வேண்டும் என மகேஷ் நாங்கள் காதலித்த போது சொல்லியிருக்கிறார். சினிமாவில் இல்லை நான் ஒரு ஆபிஸில் வேலை செய்திருந்தாலும் அவர் அதை விட சொல்லியிருப்பார். பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை இல்லை அதனால் நடிப்பை விடுவது எனக்கு அவ்வளவு கஷ்டமானதாக இருக்கவில்லை. திருமணத்திற்கு பின் என்னுடைய பெற்றோர்கள் இறந்தபோது எங்களுக்கு இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதனால் நாங்கள் இருவரும் கொஞ்ச காலம் பிரிந்து வாழ்ந்தோம் . அப்போது எங்களுக்கு இன்னும் தெளிவு கிடைத்தது இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினோம்" என நம்ரதா தெரிவித்துள்ளார்
தற்போது நம்ரதா ஒருபக்கம் குடும்பத்தையும் இன்னொரு பக்கம் மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.