பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். தற்போது நிறைய திரைப்படங்களில் அவர் காணப்படவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோ மற்றும் ரீல்ஸ் என தொடர்ந்து பதிவிடும் வழக்கம் கொண்டவர். இந்நிலையில் நடிகை மல்லிகா ரீல்ஸ் ஒன்றை இன்று பதிவிட்டுள்ளார். வீட்டில் குட்டை உடைகள் அணிந்து கொண்டு சோஃபாவில் படுத்துக்கொண்டு தான் சோர்வாக (feeling lazy) உணர்வதாக கூறியுள்ளார்.






அந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்த அவரது ரசிகர் ஒருவர், 20 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தீர்களோ… அதே போல் இருக்கிறீர்கள்!  எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? என்று கேள்வி எழுப்பினார். இந்த கமெண்ட்டுக்கு ரிப்ளை செய்த மல்லிகா ஷெராவத், தன் ரசிகருக்கு நன்றி தெரிவித்ததுடன் தன் அழகு மற்றும் இளமையின் ரகசியத்தையும் தெரிவித்துள்ளார். 


அவர் கூறியதாவது, நன்றி! உடற்பயிற்சி, யோகா, மது அருந்தாமல் இருப்பது, புகை பிடிக்காமல் இருப்பது, இரவு தாமதமாக உறங்காமல் இருப்பது என ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் நான் இப்படி  இருக்கிறேன். 






மேலும் தன்னுடைய இன்னொரு இன்ஸ்டாகிராம் பதிவில், no botox; no fillers எனக் குறிப்பிட்டு,  "கடவுள் என்னை எப்படி படைத்தாரோ, அதே இயற்கையான அழகை நான் கொண்டாடி வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.