சினிமாவில் ஹீரோயின்கள் கிசுகிசுக்களில் சிக்காவிட்டால் தான் அது தனிச் செய்தி. சிக்கினால் அது ரெகுலர் செய்தி தான். இருந்தாலும் அவர் யாருடன் கிசுகிசுக்கப்படுகிறார் என்பதை வைத்து சில நேரம் வீச்சு அதிகமாக இருக்கிறது. அப்படித்தான் அண்மையில் கிசுகிசுவில் சிக்கினார் லாவண்யா திரிபாதி.


லாவண்யா திரிபாதியின் சொந்த ஊர் உத்தரப்பிரதேசம்.  உத்தரகண்ட் மாநில முன்னாள் அழகி ஆவார். இவர் சசிகுமாரின் பிரம்மன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். சசி குமார், சந்தானம், தன்சிகா, லாவண்யா திரிபாதி நடித்து, கமல்ஹாசன் உதவியாளரான சாக்ரட்டீஸ் இயக்கி வெளிவந்த இப்படத்தின் தயாரிப்பாளர் லக்சுமி மஞ்சு.


ஆனால் அவருக்கு அதன் பின்னர் தமிழில் பெரிதாக பட வாய்ப்பில்லை. இதனால் அவர் தெலுங்கு பக்கம் சென்றார். டோலிவுட் அவரை அன்போடு வரவேற்றுக் கொண்டது.
அங்கு அவர் வருண் தேஜுடன் இரண்டு படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே நல்ல ஹிட் அடித்தன. அதைவிட முக்கியம் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ஆடியன்ஸுக்கு பிடித்துவிட்டது. இதனால் தான் இவர்களுக்கு இடையே காதல் என்ற செய்திகள் பரவின.


வருண் தேஜ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினர். உறவு என்றால் சாதாரண உறவு அல்ல. சிரஞ்சீவியின் தம்பி மகன் தான் இந்த வருண் தேஜ். இவர் அண்மையில் தனது இன்ஸ்டாவில் தங்கையுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடி படத்தைப் பகிர்ந்தார்.


பெருங் குடும்பம் சார்ந்த விவகாரம் என்பதால் லாவண்யா திரிபாதி, வருண் தேஜ் இடையே காதல் என்ற செய்தி காட்டுத்தீயாக டோலிவுட்டில் பரவியது.






அண்மையில் தான் பெரும் சினிமாக் குடும்பமான நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தா ரூத் பிரபுவும் திருமணத்தை முறித்தனர். இந்நிலையில் பெருங் குடும்ப வாரிசு நடிகரான வருண் தேஜுக்கும் நடிகை லாவண்யா திரிபாதிக்கும் காதல் என்ற செய்தி பரவியது.


இந்நிலையில், இரண்டு படங்களில் தொடர்ச்சியாக வருண் தேஜுடன் ஜோடி போட்டு நடித்ததால் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் எனவும், அதில் துளியும் உண்மை இல்லை என நடிகை லாவண்யா திரிபாதி விளக்கமளித்திருக்கிறார். இப்போதெல்லாம் படக்குழுவே கூட படத்திற்கான ஒரு மலினமான புரோமோஷனாக சில கிசுகிசுக்களைப் பரவவிடுவதும் நடைமுறையில் உள்ளது.