Just In





பாலா விழாவில் ஏன் கலந்துகொள்ளவில்லை...வெளிப்படையாக பேசிய நடிகை லைலா
திரைத்துறையில் பாலாவின் 25 ஆஅண்டுகளை கொண்டாட நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது குறித்து நடிகை லைலா விளக்கமளித்துள்ளார்

லைலா
2000 களில் கோலிவுட்டில் தனக்கேன ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் நடிகை லைலா. ரொமான்ஸ் காமெடி என இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகை லைலா. நந்தா , பிதாமகன் , மெளனம் பேசியதே, தீனா , தில் என பல வெற்றிப்படங்களில் நாயகையாக நடித்துள்ளார் லைலா. சமீப காலங்களில் மறுபடியும் திரையில் தோன்றி வருகிறார் . கார்த்தி நடித்த சர்தார் படத்தின் மூலம் மறுபடியும் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்த லைலா. விஜயின் தி கோட் படத்தில் சின்ன ரோலில் நடித்தார். தற்போது ஆதி நடித்துள்ள சப்தம் படத்தில் நடித்துள்ளார் லைலா
பாலா விழாவில் ஏன் கலந்துகொள்ளவில்லை
பாலா இயக்கிய பிதாமகன் , நந்தா ஆகிய படங்கள் லைலாவின் கரியரின் மிக்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. திரைத்துறையில் பாலா 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அவரை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகை லைலா , மற்றும் நடிகர் விக்ரம் வராதது பல கேள்விகளை எழுப்பியது. இதுகுறித்து பாலா கூறுகையில் " அவர்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நிகழ்ச்சிக்கு வராதது குறித்து எல்லாம் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என அவர் தெரிவித்தார். தற்போது இதுகுறித்து நடிகை லைலா பதிலளித்துள்ளார்
இதையும் படிங்க : Watch Video : பிதாமகன் பட காட்சியை நடித்து காட்டிய லைலா...க்யூட் வீடியோ வைரல்
"விழாவுக்கு வரச் சொல்லி பாலா சார் எனக்கு ஃபோனில் அழைத்தார். நானும் கலந்துகொள்ள ஆர்வமாகதான் இருந்தேன். ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்ட தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது . இதனால் ஆந்திராவில் இருந்து என்னால் விழாவுக்கு வர முடியவில்லை . பாலா சாரின் படங்கள் எனக்கு பெரிய அடையாளத்தை கொடுத்த படங்கள். பிதாமகன் படத்தின் காட்சிகளை இன்னும் மீம்ஸ்களாக பகிர்கிறார்கள். ரசிகர்கள் என்னை இன்னும் மறக்காமல் இருப்பதற்கு காரணம் பாலா சார் தான்" என நடிகை லைலா தெரிவித்துள்ளார்
பாலா இயக்கத்தில் சமீபத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் தோல்வியைத் தழுவியது.