சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் ஹன்சிகா மற்றும் இயக்குநர் கண்ணன் சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 






கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது.  இந்தப்படத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் இப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.


படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் வசனம் எழுதியுள்ளார். இவர்களுடன் பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ இணைந்து திரைக்கதையை உருவாக்கி  ஆர்.கண்ணனிடம் பைண்ட் ஸ்கிரிப்டை வழங்கியுள்ளனர். இன்று முதல் சென்னையில் படமாக்கும் பணியில் தொடங்கப்பட்டு இருக்கிறது.


ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்களில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஹன்சிகா சில தினங்கள் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹன்சிகா அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டார். இதில் Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் சோஹைல் கதுரியா ப்ரோபோஸ் செய்யும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதன்மூலம் ஹன்சிகாவின் திருமண செய்தி உறுதியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 


 






திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு கோவாவில் ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பின்னர் விவாகரத்து செய்தார்.  8 ஆண்டுகளுக்கும் மேலாக ஹன்சிகா - சோஹைல் கதுரியா இருவரும் தொழில்முறை பார்ட்னராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஹன்சிகாவின் சினிமா வாழ்க்கை 


1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி மங்களூருவில் பிறந்த நடிகை ஹன்சிகா, 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சின்னத்திரை தொடரான ஷக்கலக்கா பூம் பூம் தொடரின் மூலம் 2000 ஆம் ஆண்டில் தனது கலையுலக வாழ்வில் அறிமுகமானார்.  தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகவும், 2007 ஆம் ஆண்டு தேசமுதுரு  என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினும் ஆனார்.  


தொடர்ந்து இந்தி, கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த ஹன்சிகா 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். பின்னர் விஜய், சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, ஜீவா, சிம்பு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். 


இதில் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அது முறிந்தது. தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்த ஹன்சிகா கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.