நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்ஷன் திரைப்படம்,  இன்று பூஜையுடன்  தொடங்கியது.


டைரக்டர்ஸ் சினிமா தயாரிப்பில், U.அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. எளிமையாக நடைபெற்ற  இப்பட பிடிப்பு பூஜையுடன் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர் . இவ்விழாவில்  பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். 


புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்”  மற்றும் "ரேக்ளா" பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை”  இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில்,  இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. 


கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒரிசா, தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.  மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் இப்படத்தில் நடிக்க, திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 


இப்படத்தின் தலைப்பை ஆடி 18  ஆம் தேதி அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.  


நடிகர் விஜயகாந்த் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமாவில் இவருக்கு கிடைத்த வரவேற்பு தான் அவர் அரசியலில் காலடி எடுத்து வைக்கவும், ஜெயிக்கவும் காரணமாக இருந்தது. இவரின் மகனான நடிகர் சண்முக பாண்டியன் சினிமாவில் உச்ச  நட்சத்திரமாக ஜொலிப்பாரா, மக்களின் ஆதரவு கிடைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.