சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டபோது, படத்தை திரையிடுவதை எதிர்த்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாதுகாப்புநலன் கருதி சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்ப்பட்டுள்ளது. திரைப்படம் வெளியிட்டால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்  என்று பாமக தெரிவித்திருந்தது.


கடந்த ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிரான கருத்துக்களுடன் இருக்கிறது  என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார். அப்போது, நடிகர் சூர்யாவும் இது குறித்து அன்புமணிக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் பதில் அளித்திருந்தார். அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்து, வெளியாகியுள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட தடைவிதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  சூர்யா, வன்னியர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவக்கையாக சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  'பசங்க-2' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பாண்டிராஜ் மற்றும் சூர்யா ஒன்றாக இணைந்துள்ளனர்.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.


மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்,பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் கடைசி இரண்டு படங்களான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இருப்பினும் சூர்யா ரசிகர்களுக்கு படத்தை திரையரங்கில் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது.


சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களில் வெளியாகியாகியுள்ளது. சூர்யா ரசிகர்கள் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.