நடிகர் அஜித்துடன் இணைந்து பைக் பயணம் மேற்கொள்ள வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் முக்கிய கேரக்டர்களில் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள அயலான் படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார்  இயக்கியுள்ளார். 


ஏலியன் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள அயலான் படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அயலான் பட ப்ரோமோஷன் தொடர்பாக பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். 


அதில் ஒரு நேர்காணலில் நடிகர் அஜித் பற்றி சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். அதாவது, “அஜித் சாரை ஒருமுறை நேரில் சந்தித்த போது அவர் என்னிடம், ‘சிவா நீங்க பைக் ரைடு எல்லாம் போவீங்களா?” என கேட்டார். நான், ‘சார், பைக் ரைடு எங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் உள்ளூரில் ஓட்டுவது தான். உங்க அளவுக்கு எல்லாம் என்னால் வர முடியாது சார். நீங்க எல்லா நாட்டுக்கும் பயணம் செல்கிறீர்கள். ஆனால் அஜித் மாதிரி பைக் பயணம் மேற்கொள்ள வேண்டும் என ஆசை உள்ளது.






நான் நடுவுல கொஞ்ச நாள் என் நண்பரோட பைக் ஓட்டிட்டு இருந்தேன். வீட்டுல பைக் வாங்கி கொடுக்கல. சித்தப்பா பைக்கை கொஞ்ச  நாள் வச்சிருந்தேன். ஆனால் என்னால் அதனை பரமாரிக்க முடியவில்லை. இப்ப பைக் வாங்கிட்டு அதை நல்லா ஓட்ட கத்துக்கணும். அஜித் வைத்திருக்கிற பைக் வாங்கி ஓட்ட கத்துகிட்டு ஒருமுறை அவர்களுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கு. அதை நடத்தி காட்டுறதை விட வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயம் எதுவும் இல்லை” என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 


முன்னதாக நடிகர் அஜித்குமார் நடித்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அதேசமயம் பைக், கார் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட அஜித் பல நாடுகளுக்கும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது.