சிலம்பரசன்


பல்வேறு சவால்கள் விமர்சனங்களுக்குப் பின் சிம்பு மீண்டும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு , கெளதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு ஆகிய இரு படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தன. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமி ஆகி வந்தாலும் எந்த படமும் முழுமையாகி வெளியாகவில்லை என்பது சிம்பு ரசிகர்களுக்கு பயத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த எஸ்.டி.ஆர் 48 திரைப்படம் அறிவிப்பு வெளியாகி நிலுவையில் கிடக்கிறது. 


கமல் நடித்துவந்த தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்த காரணத்தினால் எஸ்.டி.ஆர் 48 படம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மிகப்பெரிய வரலாற்றுத் திரைப்படமாக  பாகுபலி ஸ்டைலில் இப்படம் உருவாகும் என கூறப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கு என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த நிலையில் சிம்பு தனது அடுத்த படத்தைப் பற்றிய தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


சிம்புவின் புதிய படத்தின் அப்டேட்


தனது எக்ஸ் பக்கத்தில் சிம்பு தனது அடுத்த படத்தைப் பற்றிய அப்டேட் தெரிவித்துள்ளார். இந்த படம் தான் நடித்த தம் , மன்மதன் , வல்லவன் , வி.டி.வி  ஆகிய நான்கு படங்களை சேர்ந்தது போலவும் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற மாதிரியும் இருக்கும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் 90ஸ் கிட்ஸ் மூடில் நாளைக்கு அப்டேட் வெளியாகும் என சிம்பு தெரிவித்துள்ளார். 


ஓ மை கடவுளே மற்றும் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தை இயக்கிவரும் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கவிருக்கிறார். ஏஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. எஸ்.டி.ஆர் 49 குறித்த அதிகாரப்பூர்வ தகவல்  நாளை வெளியாக இருக்கிறது. 









எஸ்.டி.ஆர் 48 படத்தை கமலின் ராஜ்லமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் , மற்றும் மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப். அமரன் படத்தின் வெற்றி எஸ்.டி.ஆர் 48 படத்தின் துவக்கத்திற்கு ஒரு அவசியமான காரணி. சிம்பு நடிக்கும் படம் பெரிய பட்ஜெட் படம் என்பதால் இந்த இரண்டு படங்களின் வெற்றியை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி சிவகார்த்திகேயனை நம்பிதான் சிம்பு இருக்கிறார்.