பிரபல சீரியல் ஜோடியான  ரக்ஷிதா - தினேஷ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் திருமண வாழ்க்கையில் விரிசல் விழுந்துள்ளதாகவும் ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில் அது குறித்து தற்போது ரக்ஷிதா பேசியுள்ளார்.


வெள்ளித்திரை ஜோடிகள் போலவே சின்னத்திரையில் ஒரே சீரியலில் நடித்து அதில் இருந்து பல நிஜ ஜோடிகளும் வாழ்க்கையை தொடங்கியுள்ளன. அதில் கவனிக்கவைத்த ஒரு ஜோடிதான் ரக்ஷிதா - தினேஷ். பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து அந்த நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன்பு இந்த ஜோடி ரியல் ஜோடியானது. பிரிவோம் சந்திப்போம்தான் முதல் சீரியல் என்றாலும் ரக்ஷிதாவை ரசிகர்களிடையே கொண்டுசேர்த்த சீரியல் என்றால் சரவணன் மீனாட்சிதான். 






கர்நாடகாவைச் சேர்ந்த இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியாபுரம் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார்.  பின்னர் சீரியலில் இருந்து சினிமாவுக்கும் தாவினார். சில தமிழ் திரைப்படத்திலும், கன்னட திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார் ரக்ஷிதா. இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடிக்கிறார். இந்த சீரியலில் கணவனை இழந்து இரு பிள்ளைகளை தனி ஆளாக வளர்க்கும் தாயாக நடித்து வருகிறார் ரக்ஷிதா. 






சமீபத்திய பேட்டி..


இந்நிலையில் தான் நடித்து வரும் சொல்ல மறந்த கதை சீரியல் குறித்தும் அதன் கதாபாத்திரம் குறித்தும் பேசிய ரக்ஷிதா, ”சீரியலில் வரும் கதாபாத்திரம் என்னுடைய நிஜ வாழ்வுடன் கொஞ்சம் ஒத்துப்போகிறது. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் பக்குவமும் எனக்கு உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.