நெப்போலியன்


1991ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய  ’புது நெல்லு புது நாத்து’ படத்தில்  நடிகராக  அறிமுகமானவர்  நெப்போலியன்.  குணச்சித்திர கதாபாத்திரங்களில்  நடிக்கத் தொடங்கி பின் 1993ஆம் ஆண்டு சீவலப்பேரி பாண்டி படத்தில்  நாயகனாக அறிமுகமானார். 100 படங்களுக்கும் மேல் நடித்த நெப்போலியன் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கோலிவுட் தாண்டி 'டெவில்ஸ் நைட்’, ’க்ரிஸ்மஸ் கூப்பன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.   தமிழில் இறுதியாக பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ’சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார். சினிமா தவிர்த்து திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் நெப்போலியன்


நெப்போலியன் மகன் திருமணம்


நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார் . இந்த தம்பதிக்கு  தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் இளைய மகன் குணால் மஸ்குளர் டிஸ்ட்ரோஃபி எனப்படும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து தனது திரை வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக விலகி  அவரை மருத்துவர்களிடம் காண்பிக்க அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் நெப்போலியன். மகனுக்கு ஏற்ற மாதிரியான சூழல் இந்தியாவில் இல்லாத காரணத்தினால் மட்டுமே தான் அமெரிக்காவிற்கு குடிபெயர வேண்டியதாயிற்று என்று தெரிவித்துள்ளார் நெப்போலியன். 


அமெரிக்காவில்  டென்னஸி மாகாணத்தில் தனது குடும்பத்துடன் தற்போது வசித்து வருகிறார். மேலும் ஜீவன் டெக்னாலஜீஸ் என்கிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை சொந்தமாக தனது மனைவியுடன் இணைந்து நிர்வகித்து வருகிறார். அமெரிக்காவுக்கு சென்றாலும் தன்னுடைய சொந்த விருப்பத்தில் விவசாயமும் செய்து வருகிறார் நெப்போலியன். 


முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அழைப்பு






நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் அண்மையில் தனது பட்டப் படிப்பை முடித்தார். படிப்பு முடிந்த கையோடு அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் நெப்போலியன். தனது மகன் திருமணத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண பத்திரிகையை அவருக்கு வழங்கி அழைப்பு விடுத்துள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெப்போலியனின் மகன் திருமணத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் .  




மேலும் படிக்க : Siragadikka Aasai Serial July 2: ரணகளமாக மாற இருந்த அண்ணாமலை வீடு... கெடுத்துவிட்ட மீனா - சிறகடிக்க ஆசையில் இன்று!