நடிகர் நகுல்


ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானார் நடிகர் நகுல். 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படம், நகுலை நாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாசிலாமணி , வல்லினம்,  தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  நகுல் நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வாஸ்கோடகாமா படம் கடந்த  ஆக்ஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.  நகுல், கே.எஸ். ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பிரேம்குமார், டி.எம். கார்த்திக், படவா கோபி, நமோ நாராயணா, ரவி மரியா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.


அறிமுக இயக்குநர் ஆர்.ஜி கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். அருண் என்.வி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். என்.எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் உதவி இயக்குநர் சந்த்ரு சமீபத்தில் நகுல் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்களை தெரிவித்துள்ளார்.


நடு இரவில் காண்டம் வாங்கிவரச் சொன்னார்






வாஸ்கோடகாமா படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சந்துரு வெளியிட்ட வீடியோ ஒன்றில் “வாஸ்கோடகாமா படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் நகுல் அதிகாலை நான்கு மணிக்கு, தன்னிடம் மூன்று காண்டம் வாங்கி வரச் சொன்னதாகவும் அதை செய்ய தான் மறுத்த காரணத்தினால் தனது சம்பளத்தை குறைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். உதவி இயக்குநர் சந்துரு மீது வைத்திருக்கும் இக்குற்றச்சாட்டு உண்மைதானா என்பது குறித்து சமூக வலைதளங்களில்  விவாதம் நடந்து வருகிறது. 


ஒரு சிலர் சந்துரு இந்த மாதிரியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை கவனம் ஈர்ப்பதற்காக தெரிவித்துவருவதாகவும் அவரை விமர்சித்து வருகிறார்கள். இது குறித்து நடிகர் நகுல் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காதது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


நகுல் தரப்பு விளக்கம் அளிக்கப்படுமானால் அதைக்குறித்தும் பதிவிடப்படும்




மேலும் படிக்க : Vaazhai Movie Review: இது வேற மாறி(ரி)! ரசிகர்களிடம் தழைத்ததா வாழை? முழு திரைவிமர்சனம் இதோ!


Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்