நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் இன்று ரிலீசாகியுள்ள நிலையில் ரசிகர்களுக்காக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.   தீபாவளி பண்டிகை  என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டங்களோடு அந்த தினத்தில் ரிலீசாகும் புதுப்படங்களும் அதிக கவனம் பெறும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு இரண்டு புதிய படங்கள் ரிலீசாகியுள்ளது. ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ், மற்றொன்று கார்த்தி நடித்த சர்தார்.






பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடிக்க லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரெஜிஷா விஜயன், முனீஷ்காந்த், அவினாஷ், மாஸ்டர் ரித்விக், யூகி சேது, முரளி சர்மா, வில்லனாக மிரட்ட பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். சர்தார் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.


இந்த படத்தில் கார்த்தி 15 கெட்டப்புகளில் நடித்திருக்கும் நிலையில் படப்பிடிப்பு 150  லொக்கேஷன்களில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனாலேயே சர்தார் படம் ரசிகர்களை பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சர்தார் படத்தின் முதல் காட்சி 8 மணிக்கு தான் ஆரம்பமாகிறது. அதனை முன்னிட்டு கார்த்தி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 






அதில், சர்தார் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது! என்னுடைய லட்சிய படங்களில் ஒன்று. உங்கள் அன்பு எல்லாம் வேண்டும்!  என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் கார்த்தி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.