தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. அப்பா சிவக்குமார் , அண்ணன் சூர்யா என திரை பின்னணி கொண்ட நடிகராக இருந்தாலும் , கார்த்தி தனது சொந்த உழைப்பால் முன்னேறிக்கொண்டிருக்கிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் கார்த்தி தேவ் என்ற ஒரு படம் நடித்தார். அது பலருக்கு நினைவிருக்கும்.
ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடித்த அந்த படத்தை தயாரித்தவர் கார்த்தியின் நெருங்கிய நண்பர்தான் . தாயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மணும் கார்த்தியும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள் . குடும்ப நண்பர்களும் கூட. நடிகர் சிவக்குமார் தனது மகன்களையோ , மகளையோ மிகவும் எளிமையாக , ஆடம்பரம் இல்லாமல் வளர்த்தார். பொதுவாக சினிமா நடிகர்களின் வாரிசு என்றால் , சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்ற வழக்கம் உள்ளது . ஆனால் நாங்கள் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள் என பல மேடைகளில் சூர்யா , கார்த்தி மட்டுமல்லாமல் நடிகர் சிவக்குமாருமே கூறியிருக்கிறார்.
நானும் அவரும் மிகுந்த கவனத்துடன் தேவ் படத்தை கையில் எடுத்தோம். என தனது நட்பு குறித்து மிகுந்த வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகர் கார்த்தி. ஆனால் தேவ் படம் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை . தற்போது இந்த நண்பர்கள் மீண்டும் சர்தார் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.