உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மெக்ஸிக்கன் இயக்குநர் அல்ஃபோன்ஸோ குரான் (Alfonso Cuarón) இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


கமல்ஹாசன்


உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மக்களை தேர்தல் பிரச்சாரங்களில் பிஸியாக இருக்கிறார். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் . ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் மேம் மாதம் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் தெரிவித்தது. இந்தியன் 2 படத்தில் நாயகிகளாக காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் , பிரியா பவாணி சங்கர் நடித்துள்ளார்கள் . சித்தார்த் , எஸ்.ஜே சூர்யா , பாபி சிம்ஹா உள்ளிட்ட பிற நடிகர்கள் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்


ஹாரி பாட்டர் இயக்குநரை சந்தித்த கமல்ஹாசன்


கமல்ஹாசனை உலகநாயகன் என்று ரசிகர்கள் அழைப்பதற்கு காரணம் தமிழில் அல்லது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் திரைத்துறையினரால் மாஸ்டர் என்று அங்கீகரிக்கப் படக் கூடியவர் அவர் என்பதே. காட்ஃபாதர் படத்தில் மார்லன் பிராண்டோவைப் போல் அவர் நிகழ்ச்சி ஒன்றில் நடித்து காட்டி கமல் நம்மை ஆச்சரியப் படுத்தியது நினைவிருக்கிறதா. சினிமாத் தொடர்பான உரையாடல்களில் கமல் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். உலகம் முழுவதிலும் இருக்கும்  நடிகர்கள் இயக்குநர்கள் , தொழில் நுட்ப கலைஞர்களுடம் கலந்துபேசி பிற திரைத்துறையில் சினிமா எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை தனக்கு அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார். 






ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனை கமல் சந்தித்து ஹே ராம் படத்தின் டிஜிட்டல் வடிவத்தை கொடுத்தது குறிப்பிடத் தக்கது. அதேபோல் தற்போது புகழ்பெற்ற மெக்ஸிக்கன் இயக்குநர் அல்ஃபோன்ஸ் குரானை சந்தித்து பேசியுள்ளார் கமல்ஹாசன். கிராவிட்டி, ரோமா மற்றும் ஹாரி பாட்டரின் மூன்றாவது பாகம் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் அல்ஃபோன்ஸோ குரான். இவர் இயக்கிய ரோமா படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதை வென்றது.


அல்ஃபோன்ஸ் குரான் மற்றும் கமல் சந்தித்து பேசியபோது எடுக்கப் பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா வந்திருந்தபோது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் அவர் கமலை சந்தித்ததாக கூறப்படுகிறது.