வாரிசு நடிகர்கள் திரைக்களம் காண்பது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் இது வழக்கமான ஒன்றுதான். சிவாஜி கணேஷன் மகன் பிரபு, பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, கமல் மகள்கள் அக்ஷரா, சுருதிஹாசன்,இயக்குநர் எஸ்.எ.சந்திர சேகர் மகன் விஜய், சத்தியராஜ் மகன் சிபிராஜ் என சொல்லிக்கொண்டே போகலாம். என்னதான் வாரிசு நடிகர்கள் மூன்று தலைமுறையாக, இரண்டு தலைமுறையாக சினிமாவை ஆண்டாலும், சில நடிகர்களுக்கு சினிமா எட்டாக்கனியாகவே மாறிவிடுகிறது. வாரிசு நடிகர்கள் என்ற ஒற்றை குவாலிஃபிக்கேஷனால் மட்டுமே சினிமாவில் சர்வைவ் செய்து விட முடியாது. அதற்கு கடின உழைப்பும் , பொறுமையும், மக்களை கவர்வதற்கான யுக்தியும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியான வாரிசு நடிகர்களே சினிமாவில் நிலைத்து வருகின்றனர்.
தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, கலைஞன், செந்தமிழ் செல்வன் போன்ற பல படங்களில் நடித்தார். வசீகரிக்கும் கண்களுக்கு சொந்தக்காரியான சிவரஞ்சனி 90-களில் வாழ்ந்த இளசுகளின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்கினார் சிவரஞ்சனி.
பீக்கில் இருக்கும் பொழுதே தன்னுடன் நடித்த தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரை வாழ்க்கையில் நாட்டம் செலுத்தவில்லை சிவரஞ்சனி. சில காலங்களுக்கு பிறகு பக்தி படம் ஒன்றில் தலைக்காட்டினார் அதோடு சரி. சிவரஞ்சனி- ஸ்ரீகாந்த் தம்பதிகளுக்கு திருமணமாகி ரோஷன், ரோகன் என்ற இரண்டு மகன்களும் மேதா என்ற மகளும் உள்ளனர்.