எண்பதுகளில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வந்த தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பையில் சந்தித்துள்ளனர்.
80ஸ் ரியூனியன் :
1980களில் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வந்தனர். '80ஸ் ரீயூனியன்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை, 2019-ல் சிரஞ்சீவி தனது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்வானது அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக இடம்பெற்றது. இதனையடுத்து அனைவரும் அடுத்த வருட நிகழ்ச்சிக்காக காத்திருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் '80ஸ் ரீயூனியன்' நடைபெறவில்லை.
இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு நேற்றைய தினம் அனைவரும் மும்பையில் சந்தித்தனர். பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர். பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள் சிலரையும் மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட வண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு பெண்களுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறங்களும் ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களும் அறிவிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் மேற்கண்ட வண்ணங்களில் அரங்கை தயார் செய்து தங்கள் விருந்தினர்களை வரவேற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிர மற்றும் உள்ளூர் உணவுகளுக்கு இந்நிகழ்ச்சியில் முக்கிய இடம் இருந்தது .
விடிய விடிய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய நடிகர்கள் இணைந்து கலைப்படைப்பு ஒன்றிலும் பங்கேற்றனர். விளையாட்டு மற்றும் வினாடி வினா உள்ளிட்டவைக்கு பூனம் தில்லான் ஏற்பாடு செய்திருந்தார். நட்பு, தோழமை, வேடிக்கை நிறைந்த மாலைப் பொழுதாக ரீயூனியன் அமைந்திருந்தாம்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்
ராஜ்குமார்சரத்குமார்சிரஞ்சீவிபாக்யராஜ்வெங்கடேஷ்அர்ஜுன்ஜாக்கி ஷெராஃப்அனில் கபூர்சன்னி தியோல்சஞ்சய் தத்நரேஷ்பானுச்சந்தர்
சுஹாசினிகுஷ்பூரம்யா கிருஷ்ணன்லிஸ்ஸிபூர்ணிமாராதாஅம்பிகாசரிதாசுமலதாஷோபனாரேவதிமேனகாபூனம் தில்லான்நதியா
பத்மினி கேவித்யா பாலன்டினா அம்பானிமீனாட்சி சேஷாத்திரிமது
இவர்கள் தவிர நடிகர் மாதவனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தி இருக்கிறார். ஆனால் வேலை நிமித்தமாக துபாய் விமானத்தை பிடிக்க வேண்டி இருந்ததால், அங்கிருந்து அவர் விடை பெற்று இருக்கிறார்.