சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர் நீச்சல். மக்களின் பேராதரவை பெற்ற இந்த தொடரில் பெண்களுக்கான உரிமை பற்றியும் அப்பா மகள் இடையில் நடைபெறும் பாசப் போராட்டத்தையும் மையமாக வைத்து கதை நகர்கிறது. 


 



பெண்களுக்கான போராட்டம் :


கூட்டு குடும்பமாக வாழும் ஒரு குடும்பத்தில் அண்ணனின் குரல் உயர்ந்து இருக்கிறது. அந்த குடும்பத்தில் திருமணமாகி வரும் பெண்கள் அனைவரும் வேலை செய்யும் இயந்திரங்களாக அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். அதிலும் கொடுமை நன்றாக படித்த பெண்களை தான் மருமகள்களாக திருமணம் செய்து வைத்து அடிமைகளாக நடத்துகிறார்கள். இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் முன்வரவில்லை. அடிமைத்தனத்தை அமைதியாக அனுபவித்து வருகிறார்கள். 


வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் :


இப்படி இருக்கும் குடும்பத்தில் படித்து பட்டம் பெற்ற ஜனனி  கதாபாத்திரம் மருமகளாக வீட்டிற்குள் நுழைந்த பிறகு இந்த அநியாயங்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். அதனால் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கிறாள். பல ட்விஸ்ட்கள் நிறைந்த இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல அதிரடி திருப்பங்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில் புதிதாக ஒரு நடிகை கெஸ்ட் ரோலில் என்ட்ரியாக உள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 


சின்னத்திரைக்கு வரும் 80'ஸ் நடிகை :


கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை வெள்ளித்திரையில் 80களில் பிரபலமான நடிகையாக பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்த ஜெயஸ்ரீ. இவர் 1985ம் ஆண்டு வெளியான 'தென்றலே என்னை தொடு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். 


கெஸ்ட் ரோலில் ரீ என்ட்ரி :


திரையில் பல ஆண்டுகள் தலைகாட்டாமல் இருந்த நடிகை ஜெயஸ்ரீ தற்போது சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுக்க உள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. ஜெயஸ்ரீயை மீண்டும் நடிக்க வருவது பார்வையார்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.