'உண்மையாக நேர்மையாக உழைத்தேன்; வேதனை மட்டும் மிச்சம்' - பாஜக ஐ.டி.பிரிவு தலைவர் நிர்மல் குமார் ராஜினாமா....!

தமிழக பாஜாவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அக்கட்சியின் ஐ.டி.பிரிவு தலைவர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

தமிழக பாஜாவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அக்கட்சியின் ஐ.டி.பிரிவு தலைவர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

Continues below advertisement

"கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும இல்லாமல் உண்மையாக, நேரமையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது சொந்த கட்சி பிரவாகிகளையும் கொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவகை பொன்று அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பியிருக்கும் தொண்டர்கள் கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப தடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.

தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரை போல செயல்படும் நபரால் சுட்சி அறிவை நோக்கி செல்வதை ஒவ்வோரு நாளும் பார்க்க முடிகிறது. 2019யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20 சதவீதம் கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலாத்தில் சுற்றி வரும் ஒருநபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது. அதை உணர்த்த என்னை போன்று பலர் தோல்வியுற்றோம் எல்லாவற்றிற்கும் மேலாசு நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு நிரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிமுடியும்?” என்று குறிப்பிட்டிருந்தார்.

”மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பாஜகவில் இருந்து விலகிய நிர்மல்குமார், சென்னை உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola