கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா அறிமுகமானார். கடந்த பிப்ரவரி 28 ம் தேதியுடன் திரையுலகில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 25 ம் ஆண்டை நிறைவு செய்தார். இதையடுத்து, இன்று யுவனிசம் 25 ம் ஆண்டு கான்செப்ட் சென்னையில் நடைபெற்று வருகிறது. 


இந்தநிலையில், சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு திரையுலகை சேர்ந்த பலரும் யுவன் சங்கர் ராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் யுவனுக்கு, கவிஞர் வைரமுத்து மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்தனர். 


கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவில், தம்பி யுவன்! கலைத்துறையில் வெள்ளிவிழா என்பது எளிதல்ல அது இன்பமான துன்பமானது நீங்கள் சாதித்திருக்கிறீர்கள் இளைஞர்களின் மூளைக்குள் உங்கள் இசை முகாமிட்டிருக்கிறது இளம் தலைமுறை இன்னும் எதிர்பார்க்கிறது; ஈடுகட்டுங்கள்; சிகரத்தில் வீடுகட்டுங்கள் வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 






அதேபோல், இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவில், கலைத்துறையில் வெள்ளிவிழா காணும் சகோதரர் யுவன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் ப்ரியமும் என்று தெரிவித்திருந்தார். 






முன்னதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், யுவன் சங்கர் ராஜாவை பாராட்ட  அறிக்கை வெளியிட்டார். அதில், புகழொளி மிளிரும் இசைப்பயணத்தில் 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ள இன்னிசை இளவரசன் என் அன்புத்தம்பி யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பெருமித வாழ்த்துகள்! தம்பி யுவன் இசை இன்னும் பல ஆண்டுகள் தமிழர் இதயங்களை நிரப்பி, புகழின் உச்சம் தொட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண