2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கான தேர்தல்  அலுவலர் தங்கவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய அதிகாரியாக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேபோல், எழும்பூர் தொகுதிக்கான தேர்தல் அலுவலருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் புதிய அதிகாரியாக லீலாவதி நியமிக்கப்பட்டுள்ளார்.