ABP-C Voter Exit Poll: 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. 


தெலங்கானா மாநிலத்தில் எந்த கட்சிக்கு பலம் உள்ளது என ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என பார்ப்போம்.


மக்களவை தேர்தல்:


இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.


ஏற்கனவே, ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் இணைந்து, 4 முறை தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்நிலையில், தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் தற்போது 5வது முறையாக கருத்து கணிப்புகளை நடத்தி வெளியிட்டுள்ளன. இந்த தேர்தல் கணிப்பு முடிவுகளானது, மாநில வாரியாக கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.


தெலங்கானாவில் ஓங்கும் கை:


தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி உள்ளது. அங்கு காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 38.6 சதவிகித வாக்குகளையும், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 33 சதவிகித வாக்குகளையும், சந்திரசேகர் தலைமையிலா TRS ( BRS என மாற்றப்பட்டுள்ளது ) கட்சி 20.3 சதவிகித வாக்குகளையும் AIMIM கட்சி 2.0 சதவிகித வாக்குகளையும் இதர கட்சிகள் 6.1 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் 17 மக்களவை தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி 7 முதல் 9  தொகுதிகளையும், பாஜக கூட்டணி 7 முதல் 9 தொகுதிகளையும், இதர கட்சிகளில் ஒரு கட்சியானது, ஒரு தொகுதியையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக  தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.


கருத்து கணிப்பு முறை:


சி வோட்டர் நடத்திய இந்தக் கருத்து கணிப்பானது, தேர்தல் நடைபெற்றதற்கு பின்பு, எடுக்கப்பட்டவையாகும். கருத்துக்கணிப்பானது வாக்களிக்க தகுதி உள்ளவர்களிடம்  நடத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 


கருத்து கணிப்பின் எண்ணிக்கை அளவானது 3% முதல் 5% மாறுபாடு இருக்கலாம் எனவும், 95% நம்பிக்கைத்தன்மை கொண்டதாக இருக்கும் என சி வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


மேலும் , இதர மாநிலங்கள் குறித்தும் , நட்சத்திர வேட்பாளர்கள் குறித்தும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்ன தெரிவிக்கின்றன என்பது ABP Nadu வலைதளத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.