Lok Sabha Election Result 2024: நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிற்கு பல்வேறு சலுகைகளை வழங்க,  NDA, I.N.D.I.A. கூட்டணி முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக:

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெரும்பானமையை பெறும் என்று தற்போதைய சூழல்கள் காட்டுகின்றன. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் சேர்ந்தே,  ஆட்சி அமைக்க தேவையான 272-க்கும் அதிகமான இடங்களில் இக்கூட்டணி முன்னிலை வகிக்கிறது. எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி,  272 இடங்கள் என்ற மாய எண்ணிக்கையை எட்ட வாய்ப்பில்லை என்றாலும், ஒரு மூலோபாய திட்டத்தால்,  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் அமைய வாய்ப்புள்ளது.

”நிதிஷ் துணை பிரதமர், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து”

கூட்டணி ஆட்சியை அமைக்கும் நோக்கில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி (TDP) மற்றும் ஜனதா தளம் (JDU) ஆகிய இரு கட்சிகளை முக்கிய பதவிகளை வழங்க I.N.D.I.A. கூட்டணி தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு துணைப் பிரதமர் பதவி மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து ஆகிய சலுகைகள் முதன்மையானதாக இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள இரண்டு கூட்டாளிகளின் ஆதரவையும் பெறுவதன் மூலம், I.N.D.I.A. கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

Continues below advertisement

வலை வீசும் NDA, I.N.D.I.A. கூட்டணி:

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முக்கிய பங்களிப்பாளர்களான தெலுங்கு தேசம் கட்சியின் (TDP) சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) கன்வீனராக நாயுடுவுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக வெளியான தகவலின்படி, தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சரும், காங்கிரஸின் கூட்டாளியுமான மு.க.ஸ்டாலினும் நாயுடுவைத் தொடர்பு கொண்டு, இந்தியக் கூட்டமைப்பிற்கு ஆதரவைக் கோரியுள்ளார் என்று கூறப்படுகிறது.  பீகாரில் இந்திய அணிக்கு ஆதரவைப் பெற நிதிஷ் குமாரை, சரத் பவார் அணுகியுள்ளார்.  தேர்தலின் முடிவு மிகவும் நெருக்கடியான இழுபறியாக இருக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்தியில் ஆட்சி அமைக்க NDA மற்றும் I.N.D.I.A.  கூட்டணி ஆட்சிக்கு போட்டியிடும்.