தேனி மாவட்டம் போடி தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம்:
பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தங்க தமிழ்ச்செல்வன் தோல்வியடைந்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். அவருக்கு இருக்கும் உணர்ச்சி போல் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கட்சியினருக்கு ரோஷம் வேண்டும். மீண்டும் தோல்வி அடைந்தால் கட்சியை காப்பாற்ற நாதி இல்லை. போடி தொகுதி நாசமாகிவிடும் வேட்பாளர் என அறிமுக கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசமாக பேசினார்.
தேனி பாராளுமன்ற தொகுதி :
இந்தியாவின் - 18வது மக்களவைத் தேர்தலில் - தேனி பாராளுமன்ற தொகுதிக்கு - திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றுபோடி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போடி நகர் கிழக்கு மேற்கு ஒன்றிய நிர்வாகிகளும் போடி சட்டமன்றத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் ஆவேசம்:
சுமார் 1000 க்கும் மேற்பட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியது. போடி சட்டமன்ற தொகுதி மூன்று முறை தோல்வி அடைந்துள்ளோம். இந்த முறையும் தோல்வியடைந்தால் தொகுதி நாசமாகி விடும். பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நான் தோல்வி அடைந்தால் அமைச்சர் பதவி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அந்த உணர்ச்சி போடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு வேண்டும்.
அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா.. கொதித்தெழுந்த இந்தியா.. என்னதான் பிரச்னை?
இல்லையென்றால் கட்சியை காப்பாற்ற நாதி இல்லை. இரண்டு முறை லட்சுமணன் தோல்வியடைந்துள்ளார். நான் ஒரு முறை தோல்வி அடைந்து உள்ளேன். கட்சியில் உங்களில் ஒருவர் நின்றால் நான் கடுமையான வேலை செய்யப் போகிறேன். நீங்கள் ஜெயித்தால் கட்சிக்கு நல்லது . அதேபோன்று நான் நின்று தொண்டர்கள் உழைத்து ஜெயித்தால் கட்சி வளர்ச்சிக்கு நல்லது. நான் தோல்வி அடைந்தால் என் குடும்பம் வருத்தப்படும் தொண்டர்கள் பாதிக்கப்படுவீர்கள். தேனி மக்களவையில் சட்டமன்றத் தொகுதியில் - அதிகளவிலான வாக்குகள் முன்னிலை வரும் அதை காட்டிலும் போடி தொகுதியில் அதிக வாக்குகள் வாங்குவதற்கு தொண்டர்கள் நீங்கள் உழைக்க வேண்டும் என உணர்ச்சி பொங்க பேசினார்.