திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா பறை இசைத்தும் நடனமாடியும் வாக்கு சேகரித்தார், கூடி நின்ற தொண்டர்கள் மலர்த்துவியும் விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.


Mayiladuthurai leopard: 8வது நாள்: சிறுத்தை எங்கே? மயிலாடுதுறையா? தஞ்சாவூரா? குழப்பத்தில் வனத்துறை




தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர்.திலகபாமா  கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார். பிரச்சாரத்தில் புது புது வியூகங்கள் அமைத்து தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகளுடன்  இணைந்து பணி செய்தும்  வாக்குகள் சேகரித்து வருகிறார். 


Breaking News LIVE: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தேர்தல் பரப்புரை



திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திலகபாமா இன்று திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு ரத வீதி, காந்தி மார்க்கெட், செல்லாண்டியம்மன் கோவில் தெரு, வாணி விலாஸ் இறக்கம், பிள்ளையார்பாளையம், ராமநாதபுரம், கோவிந்தாபுரம், ஆர்த்தி தியேட்டர் சாலை, ஓய் எம் ஆர் பட்டி, நாகல் நகர், அனுமந்த நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Astrology: இந்த வாரம் வாழ்க்கை யாருக்கு எப்படி இருக்கும்? தெரிஞ்சிக்கோங்க - வாரத்திற்கான ராசிப்பலன்..!


அவருடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த திலகபாமா திடீரென பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி பிரச்சார வாகனத்திற்கு முன்பு பறை இசைத்துக்கொண்டிருந்த தப்பாட்ட கலைஞர்களுடன் சேர்ந்து தானும் பறை இசைத்தும், நடனம் ஆடியபடி வாக்குகளை சேகரித்தார் . வேட்பாளர் திலகபாமா பறை இசைத்து நடனம் ஆடுவதை கண்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் அவருக்கு மலர் தூவியும், கைதட்டியும், விசுவலித்தும் ஆரவாரம் செய்தனர் இந்த நிகழ்வு பிரச்சார களத்தில் சிறிது நேரம் கலகலப்பை ஏற்படுத்தியது.