காஞ்சிபுரம் மாநகராட்சி  மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளரும் திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் எம்பியுமான டி ஆர் பாலு காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.



 

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம், பிள்ளையார் பாளையம், சின்ன காஞ்சிபுரம், செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டி ஆர் பாலு, காஞ்சிபுரத்தில் பல்வேறு முக்கிய பகுதியில் வேட்பாளருக்கு சீட்டு கிடைக்காத விரக்தியில் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள் மானம் ஈனம் சுயமரியாதை இழந்தவர்கள்தான் கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும், சீட் கிடைக்காத விரக்தியில் திட்டி வருவதால் எந்த பயனும் இல்லை இது எல்லாம் கட்சித் தலைமை தான் முடிவு செய்கிறது தொண்டர்கள் மானம் ஈனம் சுயமரியாதை இழந்தவர்கள்தான் கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும் .



 

சீட் கிடைக்காத விரக்தியில் கட்சியில் பணியாற்ற விட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  கட்சியில்  இருந்தால், மட்டுமே உங்களுக்கு முகவரி உண்டு இல்லை என்றால் நீங்கள் யார் என்று தெரியாது என தொண்டர்களுக்கு எச்சரிக்கை. எடுத்துக்காட்டாக நான் டி.ஆர்.பாலு பெரிய ஆளாக இருக்கலாம், அகில இந்தியாவில் கொடிகட்டி பறக்கலாம், பாராளுமன்றத்தில் மோடியின் பிடரியை பிடித்து இழுக்கலாம் ஆனால் டி.ஆர்.பாலு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்குற வரைக்கும் தான் திராவிட கழகம் என்ற மரியாதை இருக்கும், குளத்தில் நீந்திக் கொண்டே இருக்கும் வரைதான் இந்த மீனுக்கு சக்தி தரையில் தூக்கி போட்டால் கருவாடு ஆகிடும். நான் சொல்றது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.



 

நான் சாதாரணமாக பேசவில்லை கழகப் பொருளாளர் பேசிக் கொண்டிருக்கிறேன். எதையும் மறக்கவும் மாட்டேன், சும்மா இருக்க மாட்டேன். யார் சரியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் போற்ற படுவார் யார் சரியாக நடந்து கொள்ளவில்லை, தூக்க படுவது மட்டும் இல்லாமல், செய்ய வேண்டியதை செய்வோம், என தொண்டர்களுக்கு எச்சரிக்கை. விடுத்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன், மற்றும் மாநகர  கட்சி நிர்வாகிகள், உடன் இருந்தனர்.