தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று  காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. திமுக கூட்டணி 26 தொகுதிகளிலும், அதில் திமுக 15, காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை. அதிமுக 121 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.