12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், தற்போது அதாவது மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்பட்டது. மாணவர்கள் www.tnresults.nic.in மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தொடர்ந்து மார்ச் 23-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற்றது.

  




இந்நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு காண முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இணைய வழி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in


ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.




திருவண்ணாமலை மாவட்டம் தேர்ச்சி சதவீதவிதத்தில் கடைசி  


திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 24,021 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.47 சதவீதம் ஆகும். 


திருவண்ணாமலை  மாவட்டத்தில் மாணவர்கள் 12724, மாணவிகள் 13827 மொத்தமாக 26551 பேர் தேர்வு எழுதினர். இதில் 12724 மாணவர்களில் 11,037 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 1687 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 13827 மாணவிகளில் 12,984 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 843 மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் 86.74 சதவீதம், மாணவிகள் 93.90 சதவீத மட்டுமே பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் மாணவ, மாணவிகள் என 2530 பேர் தோல்வி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.