தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.


TN 10th Result 2024 LIVE: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 91.55% பேர் தேர்ச்சி - மாணவிகளே அதிகம்




தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்


தேனி மாவட்டத்தில் 92.63% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 7113 மாணவர்களும், 7113 மாணவிகள் என மொத்தம் 14225 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில்  6400 ஆண் மாணவர்களும், 6777 பெண் மாணவர்களும் என மொத்தம் 13177 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 88.99 சதவீதம் மாணவர்களும், 95.29 சதவீத மாணவிகளும் என மொத்தம் 92.63 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருட தேர்வு முடிவில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் பத்தாம்  வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.




திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்


அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் தேர்வு எழுதிய 24665 பேரில், 10818  மாணவர்களும், 11952  மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 89.42 சதவீதம் மாணவர்களும், 95.11 சதவீத மாணவிகளும் என மொத்தம் 92.32 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருட தேர்வு முடிவில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் பத்தாம்  வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.


முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?



  •  தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in  அல்லது http://dge.tn.gov.in  ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

  • மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.

  • அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  • மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.